ஈரோடு, ஜூலை 12- கோபிசெட்டிபாளையம் வட்டம், கொடி வேரி அணைக்கட்டிலிருந்து தடப்பள்ளி மற் றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்கு வெள்ளியன்று தண்ணீர் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் வட்டம், கொடிவேரி அணைக்கட்டிலி ருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு மாநிலங்க ளவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ் தண்ணீர் திறந்து வைத்தார். நடப்பாண்டு முதல்போக பாசனத்திற்கு அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்காலிலுள்ள பாசன நிலங்களுக்கு வரும் நவம்பர் 8ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டத்திலுள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதேபோன்று, காலிங்கராயன் வாய்க்கா லில் இருந்து வெள்ளியன்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் தலைமை யில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ.பிரகாஷ் திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை யிலிருந்து பழைய பாசன பகுதிகளான காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிக ளுக்கு அணையில் உள்ள நீர் இருப்பு, பருவ மழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர் தேவை ஆகியவற்றை கணக் கில் கொண்டு பாசனத்திற்காக திறக்கப்பட் டது. பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15 ஆயி ரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நவம்பர் 8.2024 வரை 120 நாட்க ளுக்கு தண்ணீர் திறக்கப்படும். அதேசமயம் 5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.