உடுமலை, பிப்.12- பிஏபி முதலாம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து திங்களன்று தண்ணீர் திறக்கப்பட்டது. பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட் டம் (பிஏபி) திருமூர்த்தி அணை மூலம் திருப் பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 3 லட் சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், உடுமலை நகராட்சி, உடு மலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய பகுதி கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாசன நிலங் கள் நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 4 ஆம் மண்டல பாசனத்திற்கு, கடந்தாண்டு செப்.20 முதல் கடந்த ஜன. 13 வரை நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட் டது. இதனையடுத்து, முதலாம் மண்டல பாச னத்திற்கு நீர் திறக்க விவசாயிகள் வலியு றுத்தினர். கடந்த 7 ஆம் தேதி முதல் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால் வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண் ணீர் கொண்டு வரும் பணி துவங்கியது. இந்நி லையில், முதலாம் மண்டல பாசனத்துக்கு பிப். 12 முதல், வரும் மே மாதம் 22 ஆம் தேதி வரை 100 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு, சுற்றுகள் அடிப்படையில் 5 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் வழங்க அரசு உத்த ரவிட்டுள்ளது. தண்ணீர் திறப்பால், திருப்பூர், கோவை மாவட்டத்திலுள்ள 94 ஆயிரத்து 521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அதே போல், பாலாறு படுகை, பழைய ஆயக்கட்டு தளி கால்வாய், ஏழு குழு பாசனத் திலுள்ள 2 ஆயிரத்து 786 ஏக்கர் நிலங்களுக்கு இன்று முதல் மே 31 ம் தேதி வரை குறிப்பிட்ட இடைவெளியில், 260 மில்லியன் கன அடி தண் ணீர் திறக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. திருமூர்த்தி அணையில் இன்று காலை நிலவரப்படி, நீர்மட்டம் மொத்தமுள்ள 60 அடியில், 55.15 அடி நீர் இருந்தது. அணைக்கு, நீர்வரத்து வினாடிக்கு 622 கன அடியாகவும் இருந்தது. மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்று திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண் டல பாசனத்திற்காக பிரதான கால்வாய் மற்றும் தளி கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டனர். இதில் பாசன சங்க விவசாயிகள் பங் கேற்றனர்.