அவிநாசி, மார்ச் 4 – திருப்பூரில் இருந்து கோவை செல்லும் தனியார் பேருந்து, கடந்த புதன்கிழமை அவிநாசிக்குள் செல்லாது என்று சொல்லி அவசரகதியில் இறக்கிவிடப்பட்டதால் செல்வி என்ற பெண் அதே பேருந்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பரவி கடும் அதி ருப்தி ஏற்படுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பலரும் தனியார் பேருந்துகள் அவிநாசிக்குள் வந்து செல்வதை உறு திப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தவும் அறிவித்துள்ள னர். இந்த நிலையில் சனியன்றும் தனியார் பேருந்து ஒன்று அவிநாசிக்குள் செல்லாமல் புறவழிச் சாலை வழியாக செல்ல முயன்றது.இதையடுத்து அவிநாசியை சேர்ந்த சமூக ஆர்வ லர்கள் அப்பேருந்தை வழிமறித்து, போக்குவரத்து அதிகா ரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அப் பேருந்தின் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்து பேருந்தை அவி நாசி வழியாக இயக்க வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனைத்ட தொடர்ந்து, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவிடம் சமூக ஆர்வலர்கள் மனு வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட எம்.பி, போக்குவரத்து அதிகாரிகளிடம் பிரச்சனை குறித்து கேட்டறிந்து, கோவை கொடிசியாவில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைத்தால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என கூறினார். இந்நிகழ்வில், திமுக நிர்வாகிகள், சரவண நம்பி, சாமிநாதன் அவிநாசி பேரூராட்சி தலை வர் தனலட்சுமி பொன்னுசாமி ஆகியோர் உடன் இருந்த னர்.