districts

img

பட்டாவிற்கு நிலம், பட்டா வகை மாற்றம் கோரி சிபிஎம், ததீஒமு சார்பில் காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர், செப்.30 - மகத்தான மக்கள் போராளி விவசாய இயக்க முன்னோடி தோழர் பி.சீனிவாசராவ் நினைவு  தினத்தை முன்னிட்டு, ஈட்டிவீரம் பாளையத்தில் வழங்கப்பட்ட பட்டா விற்கு நிலம் அளந்து தரக் கோரியும்,  மாணிக்காபுரத்தில் பட்டா வகை மாற்றம் செய்து தரக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி  சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்  நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பல்லடம்  வட்டம் மாணிக்காபுரம் ஊராட்சி யில் உள்ள கருப்பண்ணசாமி நக ரில் க.ச.எண் 13/1 ல் குடியிருக் கும் 31 குடும்பத்திற்கு பட்டாவும், மாணிக்காபுரம் க.ச.எண் 91/1  மந்தை புறம்போக்கில் குடியிருக் கும் 147 பேருக்கு நத்தமாக வகை  மாற்றம் செய்து பட்டா வழங்கக் கோரி செப். 30ஆம் தேதி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார் பில் காத்திருப்புப் போராட்டம் நடத் தப்படும் என அறிவிக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் திங்க ளன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், ஒன்றியச் செய லாளர் ஆர்.பரமசிவம் தலைமை யில் பல்லடம் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. இதையடுத்து  வட்டாட்சியருடன் பேச்சுவார்த்தை  நடைபெற்றது. இதில், கருப்பண சாமி நகரில் குடியிருப்பவர்க ளுக்கு அரசு நிகழ்ச்சியில் பட்டா  வழங்கப்படும் என்று தெரிவித்த னர். அதன் நகல் உடனடியாக திங்க ளன்று வழங்கப்பட்டது. மாணிக்கபு ரம் மந்தைவெளி புறம் போக்கை ஒரு வாரத்தில் வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட நிர் வாகிகள் எஸ்.முருகசாமி, சா.பிர வீன்குமார், வாலிபர் சங்க ஒன்றியச்  செயலாளர் சி.முருகேஷ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றியக் குழு உறுப்பினர்கள் துரை சாமி, ராஜேந்திரன் மற்றும் வைஸ்.சுப்பிரமணி, நை.பிரகாசம் மாணிக்காபுரம் மற்றும் ராசாகவுண் டம்பாளையம் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அவிநாசி:

அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் மற்றும்  தீண்டாமை ஒழிப்பு முன்னணியி னர் திங்கட்கிழமை ஈட்டிவீரம்பா ளையம் பகுதி மக்களுக்கு வழங் கிய பட்டாவிற்கு நிலம் அளந்து தரக் கோரி வட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட ஈட்டிவீ ரம்பாளையத்தில், க.ச.எண் 544 அரசு புறம்போக்கு நிலத்தில், நில மற்ற ஏழை மக்களுக்கு வீட்டு மனை பட்டா 1994ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால், இது வரை பயனாளிகளுக்கு நிலம் அளந்து கொடுக்கவில்லை. இதை யடுத்து அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் நிலத்தில் குடியேற முயற்சித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சி யர் நான்கு நாட்களில் தீர்வு ஏற்ப டுத்துவதாக உறுதி அளித்தார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து செப்.30ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக  அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்ப டையில் திங்களன்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமையில் அவிநாசி வட்டாட் சியர் அலுவலகத்தில் ஈட்டிவீரம்பா ளையம் பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் போராட்டத்தை மேற்கொள்ள முற் பட்டனர். இதை அறிந்த காவல்து றையினர் போராட்டத்தை தடுத்து,  வட்டாட்சியர் மூலமாக பேச்சுவார்த் தையில்  ஈடுபட்டனர். இதில்  கோரிக்கைகளுக்கு வெள்ளிக்கி ழமை தீர்வு காணப்படும் என தெரி வித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ச.நந்தகோ பால், கே.உண்ணிகிருஷ்ணன், திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலா ளர் ஆர்.காளியப்பன், அவிநாசி  ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வர மூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலச் செயலாளர் சி.கே. கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.