சேலம், பிப், 11 - நூறு நாள் வேலை திட்டத்தில், வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பணி வழங்க வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தமிழகம் முழுவதும் பணியாற்றிய தொழிலாளர் களின் கூலியை ஆறு வாரங்களுக்கு மேல் பாக்கியுள்ள ரூ.1065 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். 200 நாள் வேலை யும் 600 ரூபாய் தினக் கூலியும் வழங்க வேண்டும். விவசாயிக ளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக ஒன்றிய மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், தலைவாசல், பட்டுத் துறை, நந்தக்கரை, தியாகனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏழை மக்களுக்கு உடனே வீட்டுமனை பட்டா வழங்க வேண டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விதொச சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திங்க ளன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலாளர் சி. மாரிமுத்து தலைமை ஏற்றார். இதில், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாவட்டச் செயலா ளர் ஜி.கணபதி, மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் எம்.குணசேகரன், ஆத்தூர் சிபிஎம் செயலாளர் ஏ.முருகேசன் உள்ளிட்ட திரளான விவசாய தொழிலாளர்கள் பங்கேற்ற னர்.