உடுமலை, மார்ச் 10 – உடுமலை அருகே பண்ணைக்கிணறு பகுதியில் சுமார் 42. 89 ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ.82.1 கோடி மதிப்பில் கால் நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறக் கப்பட்டது. இக்கல்லூரியில் நிர்வாக கட்டடம், எட்டு துறைகளைச் சார்ந்த கல்விக்கூடங்கள், ஒரு கால்நடை பொருட்கள் தொழில் நுட்ப கூடம், பிரேத பரிசோதனை கூடம் மற்றும் மாணவ, மாண வியர் விடுதி, கல்லூரி முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு குடியி ருப்புகள் மற்றும் மருத்துவ கல்லூரி, கால்நடை பண்ணை வளாகம் என அனைத்தும் சிறப்பாக கட்டப்பட்டு உள்ளது. மேலும், ஒரு ஆண்டுக்கு இக்கல்லூரியில் 40 இளங்கலை கால் நடை மருத்துவ மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கு கால்நடை மருத்துவ வளாகம், கால்நடை பண்ணை வளாகம் சேர்த்து மொத்தமாக 15 துறைகள் செயல்படுகிறது. கால்நடை குறித்த அனைத்து பிரிவுகளும் இந்த கல்லூரியில் செயல்படுவதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல் லூரியை 9 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சியின் மூலம் திறத்து வைத்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கால்நடை மருத்துவ கல்லூரியின் திறப்பு விழாவில், எந்த அரசியல் பிரமுகரும் இல் லாமல் கல்லூரி முதல்வர் மற்றும் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது.