கோவை, பிப்.19- கோவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனி வாசன் மாஸ்க் அணிய மறுத்து வாக்களிக்க சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாஜகவின் வானதி சீனிவாசன். இந்நிலையில், இவர் சனியன்று நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி மன்ற தேர் தலையொட்டி டாடாபாத் சிஎம்எஸ் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்ய வந்தார். இவருடன் பாஜக நிர்வாகி கள் உட்பட பலரும் உடன் வந்தனர். ஆனால், வானதி சீனிவா சன் மற்றும் அவருடன் வந்த யாரும் மாஸ்க் அணியவில்லை. இதையடுத்து வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டி ருந்த ஊழியர்கள் வானதி சீனிவாசன் மற்றும் அவருடன் வந்த பாஜகவினரை மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தி னர். மேலும், மாஸ்க்கையும் அவர்கள் வழங்கினர். ஆனால், அதன்பின்னரும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மாஸ்க் அணிய மறுத்து வாக்குச்சாவடிக்குள் சென்றனர். தேர்தலில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டா யம் பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தர விட்ட நிலையில் பாஐக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியப்படுத்திய சம்பவம் சமூக வலையதளங்களில் பரவி பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.