districts

img

மாட்டு அம்மைக்கு தடுப்பூசி

நாமக்கல், ஆக.10-  கோடை காலம் முடிந்து நிலையில் மாடுகளுக்கு மாட்டு அம்மை நோய் வராமல் தடுக்க, நாமக்கல் மாவட்டத்தில் பரவ லாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம், கால்நடை துறை சார்பில், குமார பாளையம் அருகே தட்டான் குட்டை ஊராட்சி, கல்லாங்காட்டு வலசு, வீரப்பம்பாளையம் பகுதியில் சனியன்று மாடுக ளுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இது குறித்து கால்நடை மருத்துவர் செந் தில்குமார் கூறியதாவது, ஆண்டுதோறும் மாடுகளுக்கு மாட்டு அம்மை தடுப்பூசி போடப்படுவது வழக்கம். இந்த  ஆண்டுக்கான தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. மாடுகள் இருக்கும் இடத்திற்கு சென்று  தடுப்பூசி போடபட்டு வருவதாக தெரிவித்தார்.