உடுமலை, ஜூலை 2 - உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற் றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் பெதப்பம்பட்டியில் உள்ள கால்நடை சிகிச்சை வளாகத்தில் செல்லப்பி ராணிகளுக்கு தடுப்பூசி என்ற சுழல் நிதி திட்டத்தின் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி என்ற சுழல் நிதித் திட் டத்தின் நிகழ்ச்சியை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவி யல் பல்கலைக்கழகத்தின் சிகிச்சையை இயக்குநர் டி.சத்திய மூர்த்தி மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பா.குமரவேல் ஆகியோர் துவக்கி வைத்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த திட்டம் மூலம் வெறிநோய் தடுப்பூசி, டிஎச்பிபிஐஎல் தடுப்பூசி மற்றும் பூனைகளுக்கான தடுப்பூசிகள் குறைந்த கட்டணத்தில் காலை 8 மணி முதல் 1 மணி வரை போடப்படும். விடுமுறை நாட்களில் 8 மணி முதல் 11 மணி வரை போடப்படும். மேலும், கால்நடை சிகிச்சை தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு பற்றிய மென்பொருள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது எனவே செல்லப் பிராணி வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்தனர்.