districts

img

ஆக.6 ஆம் தேதி வரை உதகை மலைரயில் ரத்து

மேட்டுப்பாளையம், ஆக.2- தொடர் மழையால் சீரமைப்புப் பணி கள் தாமதமாவதால், மேட்டுப்பா ளையம் – உதகை இடையேயான மலை ரயில் ஆக.6 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வா கம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 7 மணிக்கு குன்னூர் வழியே உதகை செல்ல நீலகிரி மலைர யில் இயக்கப்பட்டு வருகிறது. நூற் றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயி லில் பயணித்தபடி, இயற்கை அழகை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், வியாழனன்று இரவு மலைரயில் கடந்து செல்லும் மலைப் பாதையில் பெய்த கனமழை காரண மாக ஹில்குரோ - அடர்லி ரயில் நிலை யங்களுக்கு இடையே மண் சரிவுகள் ஏற்பட்டது. இதில், மரங்களும், கற்க ளும் சகதியோடு மண்ணும் சரிந்து தண்டவாள பாதையை மூடி சேதப்ப டுத்தியது. இதனால், வெள்ளியன்று காலை 184 பயணிகளோடு மேட்டுப்பா ளையம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம்போல் புறப்பட்ட மலைரயில் கல்லார் ரயில் நிலையம் வரை சென்று விட்டு மேற்கொண்டு பயணிக்க இயலாமல் மீண்டும் மேட்டுப்பாளை யம் ரயில் நிலையத்திற்கே கொண்டு வரப்பட்டு, வெள்ளியன்று மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவ தாக அறிவிக்கப்பட்டது. இதனால் மலைரயிலில் வந்த சுற்றுலாப் பயணி கள் ஏமாற்றத்துடன் வேறு வாகனங் கள் மூலம் நீலகிரி சென்றனர். இந்நிலையில், மலைரயில் கடந்து செல்லும் இருப்புப்பாதையில் சரிந்து கிடக்கும் மண் சகதிகள், மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றி தண்டவா ளத்தை சீரமைக்கும் பணி ரயில்வே பணியாளர்களால் துவக்கப்பட்டது. ஆனால், சீரமைப்பு நடைபெறும் பகுதி யில் அவ்வப்போது மழை பெய்த படி இருந்ததால் பணிகள் தாமதமான தோடு மேலும் சில இடங்களில் சிறு சிறு அளவில் மண் சரிவுகள் ஏற்பட்டன. இதனையடுத்து மழை தொடர்வ தாலும் சரிவுகளை சீரமைக்கும் பணிகள் நிறைவடையாததாலும், ஆக.6 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான நீலகிரி மலைரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.