districts

img

வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்திடுக

சேலம், ஜன.4- வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். வரலாறு காணாத வகையில் பெருமழையால் தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, தீவிர பேரிடராக அறிவித்து, ரூ.21 ஆயிரம் கோடி நிவாரணமாக ஒன்றிய அரசு வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக மண்டலச் செயலாளர் இமயவர்மன் கண்டன உரையாற்றி னர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, சிபிஐ மாவட்டச் செயலாளர் மோகன், விசிக மாவட்டச் செய லாளர்கள் காஜா மைதீன், மொழியரசு, கருப்பையா, மெய்ய ழகன் தெய்வானை, சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்ட னர். தருமபுரி இதேபோன்று தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விசிக தருமபுரி மைய மாவட் டச் செயலாளர் த.கு.பாண்டியன், கிழக்கு மாவட்டச் செய லாளர் சி.கே.சாக்கன்சர்மா, மேற்கு மாவட்டச் செயலாளர் கா. கருப்பண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். தருமபுரி தொகுதி செயலாளர் கா.சக்தி வரவேற்றார். இதில் தலைமை நிலையச் செயலாளர் தகடூர் மா.தமிழ்ச்செல்வன் ரத்தினம், மண்டல துணைச்செயலாளர் மின்னல் சக்தி, மாநில துணைச் செயலாளர்கள் அதியமான், சிவஞானம் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.