திருப்பூர், ஏப்.21- ஊத்துக்குளி ஆர்.எஸ். சாலையில் இருந்து சென்னிமலை சாலைக்கு உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவார் கள். எனவே இந்த மேம்பாலம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஊத்துக் குளியில் கன மழை பெய்ததன் காரணமாக ஊத்துக்குளி - சென்னிமலை சாலையில் ரயில்வே நுழைவு பாலத்தின் அடியில் அதிக அளவு மழைநீர் வெள்ளம் சென்றது. இத னால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் வாக னங்கள் சிக்கிக் கொண்டன. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக் கள் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமாருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் பேரூராட்சி தலை வருக்கு தகவல் அளித்து, ஊத்துக்குளி பேரூராட்சி சுகாதார பணியாளர் இருவரை வரவழைத்து மழைநீர் வடிகாலில் ஏற்பட்டு இருந்த அடைப்புகள் நீக்கப்பட்டது. இதையடுத்து மழைநீர் தேங்காமல் வழிந் தோடும் நிலை ஏற்பட்டது. சாக்கடை கால்வாய் முழுவதும் அடைப்பு உள்ளதா என ஆய்வு செய்து வெள்ள நீர் வேகமாக வழிந்தோடுவது உறுதி செய்யப்பட்டது. ஊத்துக்குளி நகர சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த பாலத்தின் வழியாக செல்ல வேண்டிய நிலையில் அதிகப்படியான தண்ணீர் வருகி றது. மழை நீரால் இருசக்கர வாகனங்கள், கார் போன்ற வாகனங்கள் செல்ல முடிய வில்லை. ஊத்துக்குளி ஆர்.எஸ். வழியாக சுற்றிச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. வெள் ளத்தை பொருட்படுத்தாமல் சென்ற ஒரிரு வாகனங்கள் நீரில் சிக்கி இடையில் பழுதாகி நின்று விட்டது. பின்பு ஊத்துக்குளி காவல் துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாள ரிடம் பேசி காவலர்கள் வருகை தந்து மைய தடுப்பான் கொண்டு வந்து அங்கே வைத்து, வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல ஏற் பாடு செய்யப்பட்டது.
ஊத்துக்குளி - சென்னிமலை சாலையில் பிரதான போக்குவரத்து நடைபெறும் இந்த ரயில்வே நுழைவு பாலத்தை தினமும் ஆயி ரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின் றனர். சென்னிமலை வரை 25 கி.மீ. சுற்றள விற்கு இவ்வழியாகத்தான் சென்றாக வேண் டிய சூழல் உள்ளது. மழை காலத்தில் இவ்வழியே போக்குவரத்து பிரச்சினை யாக மாறிவிடுகிறது. இப்பகுதி பொதுமக் கள் நன்மை கருதி ஊத்துக்குளி பேரூராட்சி பணியாளர்கள் மூலமாக அவ்வப்போது பராமரிப்பு பணி செய்து வருகிறது. மேலும், தற்காலிக ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த சாலையில் ஏற்படும் இடர்பாடு கள் குறித்து ஊத்துக்குளி பிரிவு நெடுஞ் சாலைத்துறை எந்த கவலையும் கொள்வ தில்லை. எதிர்காலத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண, வாகனங்கள் எளிதில் சென்று வர ஏதுவாக ஊத்துக்குளி ஆர்.எஸ். சாலை யில் இருந்து சென்னிமலை சாலைக்கு உயர் மட்ட மேம்பாலம் ஏற்படுத்துவதே நிரந்தர தீர் வாக அமையும்.
இதற்கு திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பி னரும், சட்டமன்ற உறுப்பினரும் உரிய இடங்களில் குரல் கொடுக்க வேண்டும். கடந்த காலத்தில் இப்பாலத்தின் கீழ் பேவர் பிளாக் அமைத்து வடிகால் அமைக்க உத விய மாவட்ட அமைச்சர் மு.பெ.சாமிநா தன் இப்பிரச்சினையில் கூடுதல் கவனம் எடுத்து நிறைவேற்றி தரவேண்டும். ஏனெ னில் காங்கயம் தொகுதிக்குட்பட்ட, சென்னி மலை பகுதி மக்கள் திருப்பூர் செல்ல அதிகம் பயன்படுத்தும் சாலை இதுவாகும் என்றும் ஆர்.குமார் கூறினார். இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியும் தொடர்ந்து வலுவாக குரல் கொடுக் கும். ஊத்துக்குளி பேரூராட்சி, ஊராட்சி ஒன் றிய நிர்வாகங்கள் இணைந்து கழிவுநீர் பாலத்தை கடந்து செல்ல உரிய திட்டமி டல் செய்து அமலாக்க வேண்டும். இந்த மழைநீர் சென்றால் தேங்க கூடிய வாரி குட்டை மற்றும் ஓட்டை குளம் குட்டைகள் ஊத்துக்குளி பேரூராட்சி மூலமாக தூர் வார வேண்டும். இக்கோரிக்கைகள் வென் றிட ஊத்துக்குளி பேரூராட்சி 7ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் சரஸ்வதி குமார் தொடர்ந்து மன்றத்தில் குரல் கொடுப் பதாகத் தெரிவித்தார். ஊத்துக்குளி மட்டு மின்றி சுற்று வட்டார பகுதி மக்களும் இக் கோரிக்கைக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் ஆர்.குமார் கூறினார்.