districts

img

ஆவணப்பதிவுக்கு இந்து அறநிலையத்துறை தடை விதிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தல்

திருப்பூர், மே 30- முறையான ஆவணங்கள் வைத்திருந் தும், பத்திரப்பதிவுக்கு செல்லும்போது இந்து சமய அறநிலையத் துறை தடை விதிப் பதை ரத்து செய்ய வேண்டும் என சமய நிலங்களைப் பயன்படுத்துவோர் பாது காப்பு சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க திருப் பூர் மாவட்ட முதல் மாநாடு திங்களன்று பல்ல டம் விவசாய சங்க அலுவலகத்தில் நடை பெற்றது. இம்மாநாட்டிற்கு சி. சுப்பிரமணியம் தலைமை வகித்தார். எஸ். தங்கவேல் வரவேற்றார். திருப்பூர் ஜி. ஈஸ்வரமூர்த்தி, காங்கயம் எஸ்.தனசேகர், காடையூர் வடிவேல், பல்லடம் கே. சுப்ரமணியம், தாராபுரம் நடராஜ், மணி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட அமைப் பாளர் ஆர்.வெங்கட்ராமன் வேலையறிக் கையை முன்வைத்தார். தீர்மானங்களை விளக்கி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார் உரையாற்றினார். திருப்பூர் மாவட்ட அகில இந்திய வழக்கறி ஞர் சங்க செயலாளர் எஸ்.பொன்ராம்,

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பரமசி வம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஏ. சண்முகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், கோவில் இடங்களில் அடிமனை வாடகைதாரர்கள், குத்தகை விவசாயிகள், சிறு கடை வைத்திருப் போருக்கு பல மடங்கு உயர்த்தப்பட்ட வாட கையை முன்தேதியிட்டு நிலுவையாக பல லட்சங்களை ஒரே தவணையில் கட்ட வேண்டுமெனவும், கட்டத் தவறினால் வீடுகளை இடிப்போம் என அறநிலையத் துறை அச்சுறுத்துவதை உடனே கைவிட வேண்டும். விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க தடை விதிக்கக்கூடாது. விவசாய நிலங்களுக்கு குத்தகை பதிவு (ஆர்டிஆர்)செய்து கொடுக்க வேண்டும். வக்போர்டு, தேவா லய இடங்கள், மடங்கள், அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் குடியிருப் பவர்கள், சாகுபடி செய்பவர்களுக்கு அந்தந்த இடங்களை சொந்தமாக்கி தர வேண்டும். திருப்பூர் தெற்கு வட்டத்தில் முறையான ஆவணங்களை வைத்தி ருந்தும் அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்யக் கூடாது என தடை ஆணை பிறப்பிக் கும் அறநிலையத்துறையின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். ஜூன் 6, 7  தேதிகளில் மயிலாடுதுறையில் நடைபெ றும் அனைத்து சமய நிலங்களை பயன் படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் முதல் மாநில மாநாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்வது என தீர் மானிக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக சி.சுப்பிரமணியம், செயலாள ராக ஆர்.வெங்கட்ராமன், பொருளாளராக ஜி.ஈஸ்வரமூர்த்தி, துணைத் தலைவர்க ளாக ஆர்.நடராஜ், வி.கணேஷ், துணை செய லாளர்களாக கே.ரவி, எஸ்.தனசேகர் உள் ளிட்ட 18 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக, இம்மாநாட்டில் மாவட்டம் முழுவதும் இருந்து பங்கேற்ற சமய நிலங் களை பயன்படுத்தி வருகிற விவசாயிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் தங்களுக்கு ஏற் பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைத் தனர். அதன்பின்பு மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் நிறைவுரையாற்றினார். விவ சாயிகள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.வெங்கடாசலம் நன்றி கூறினார்.