districts

img

கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, அக்.28- கரும்பு வெட்டும் தொழி லாளர்களுக்கு தனிநல வாரி யம் அமைக்க வேண்டும் என கரும்பு வெட்டும் தொழிலா ளர் சங்க மாநாடு வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு கரும்பு வெட் டும் தொழிலாளர் சங்கத்தின் சுப்ரமணிசிவா கூட்டுறவு ஆலை மாநாடு அரூர் ரவுண்டானா அருகே உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற் றது. இம்மாநாட்டிற்கு, மாவட்ட பொருளா ளர் எம்.கோவிந்தன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் எம்.முத்து மாநாட்டை  துவக்கி வைத்தார். மாநில பொதுச்செயலா ளர் ஈ.கே.முருகன் சிறப்புறையாற்றினார். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.நேரு ஆகியோர் வாழ்த்துரை வாங்கினர். இதில், கரும்பு வெட்டும் தொழிலாளர் களுக்கு தனி நல வாரியம், அடையாள அட்டை வழங்க வேண்டும். கரும்பு வெட்டும் போது உடலில் ஏற்படும் சிராய்ப்புகளால், எரிச்சல் உள்ளிட்ட தோல் சம்பந்தப்பட்ட நோய்களால் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே சீருடை, காலணி, ரப்பர் ஷூ உள்ளிட்ட பாதுகாப்பு உப கரணங்கள் இலவசமாக வழங்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிர்வா கமே வழங்க வேண்டும். கரும்பு வெட்டும்  போது ஏற்படும் விபத்திற்கான  மருத்துவ செலவை அரசும், ஆலை நிர்வாகமும் வழங்க வேண்டும். குழு காப்பீடு திட்டத்தை அமல் படுத்தி, பிரிமியத் தொகையை ஆலை நிர்வா கமே செலுத்த வேண்டும். கரும்பு வெட்டும் போது விசப்பூச்சிகள் மற்றும் பாம்பு கடித்து  தொழிலாளர்கள் மரணமடைந்தால் குடும்பத் திற்கு ரூ.5 லட்சம் குடும்ப நிதியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில், தலைவராக எம்.கோவித் தன், செயலாளராக தமிழ்ச்செல்வன், பொரு ளாளராக ரமேஷ் உள்ளிட்ட 16 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டனர்.