திருப்பூர், ஜன. 27 - திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைக ளுக்கு அம்மை நோய் தாக்குதலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை மருத்துவ மனைக்கு கொண்டு வர முடியாத நிலையில், மருத்துவர்கள் களத்திற்கு நேரில் வந்து சி கிச்சை அளிக்க வேண்டும் என விவசாயி கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மாதாந் திர குறைதீர்க் கூட்டம் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் பேசுகையில், திருப் பூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதற்காக இரண்டு லட்சத்து 55 ஆயிரம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு 2 லட்சத்து 5 ஆயிரம் ஊசிகள் போடப்பட்டுள்ள தாக கால்நடை துறையினர் தெரிவிக்கின்ற னர். எஞ்சிய 50 ஆயிரம் ஊசிகளையும் கால் நடைகளுக்கு செலுத்த வேண்டும். தற்போது வரை இம்மாவட்டத்தில் 695 மாடுகள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. 50 மாடுகள் இறந்து விட்டன. இந்நோய் தாக்குதலால் பாதித்த மாடுகள் அப்படியேபடுத்துவிடும். அவற்றை கால்நடை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முடியாது. ஆனால் கால்நடை மருத்து வர்கள், மருத்துவமனைக்கு கொண்டு வரும் படி கேட்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் அம்மை நோய் பாதித்த மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களை நேரடி யாக விவசாயிகள் இடத்திற்கே வரவழைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். அடுத்து கோடை காலம் வர உள்ள நிலையில் கோமாரி நோய் தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அதை தடுக்கவும், கால்நடைகளுக்கு உடனடியாக கோமாரி நோய் தடுப்பு ஊசி போட வேண் டும்.
உடுமலையில் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் 15 ஏக்கர் பரப்பள வில் சொந்த கட்டிடத்தில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதை பொள்ளாச் சிக்கு மாற்ற போவதாக தகவல் வருகிறது. இதனால் விவசாயிகள் உட்பட பல்வேறு தரப் பினரும் பாதிக்கப்படுவர். மின்வாரிய கண்கா ணிப்பு பொறியாளர் அலுவலகத்தை உடும லைப்பேட்டையில் இருந்து மாற்றக்கூடாது. கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் தருவதற்கு தற்போது மிகவும் காலதாமதம் செய்யப்படுகிறது. குறிப்பாக பாப்பம்பட்டி யைச் சேர்ந்த காளிமுத்து, பால தண்டபாணி ஆகியோர் கரும்பு சாகுபடிக்கு கடன் பெற விண்ணப்பித்து ஐந்து மாத காலமாகியும் இன் னும் கடன் தரப்படவில்லை. உடனடியாக வேளாண் கடன் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலைப்பேட்டை பகுதியில் விவசாய விளைநிலங்களில் காட்டுப்பன்றி தாக்கு தலால் விவசாய பெண் தொழிலாளி பாப் பாத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். விருகல்பட்டியைச் சேர்ந்த அவருக்கு ரூபாய் 52 ஆயிரம் இழப்பீடு விடுவிக்கப்பட் டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் இதுவரை அந்த தொகை வர வில்லை. உடனடியாக இழப்பீடு வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இது தவிர விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட பொதுவான விவசாய பிரச்சனை களில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கண்கா ணிப்பு செய்ய வேண்டும். காலாவதியான விதை, தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து விற் பனை செய்யப்படுகிறது. எனவே மாவட்டம் முழுவதும் உள்ள உரம், பூச்சி மருந்து, விதை விற்பனை செய்யும் விற்பனையாளர்களு டன், விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசுவதற்கு, உரிய தீர்வு காண்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எஸ்.ஆர்.மதுசூதனன் கேட்டுக் கொண்டார். விவசாய பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய விஷயங்கள் குறித்து சில விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இடம் அழைத்து கருத்து பெறப்பட்டுள்ளது. தமிழ் நாடு விவசாயிகள் சங்கமும் விவசாய பட்ஜெட் குறித்து ஆலோசனைகளையும், கருத்துகளையும் எழுத்துப்பூர்வமாக சமர் ப்பிக்கிறோம். அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மதுசூதனன் கூறினார். இதைத்தொடர்ந்து அமராவதி பாசன சபை விவசாயி ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், அமராவதி சர்க்கரை ஆலையை உடனே இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றார். தாராபுரம் பகுதி விவசாயி காளிமுத்து பேசும்போது, உப்பாறு அணைக்கு அமரா வதி அணையில் இருந்து நீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியு றுத்தினார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தின் நிறுவனர் ஈசன் முருகசாமி பேசுகை யில், பி ஏ பி வாய்க்கால் பகுதியில் 50 மீட்டர் தொலைவுக்கு மின் இணைப்புகளை துண் டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை கைவிட வேண்டும். வாய்க்கால் அமைப்பதற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்படும். எனவே இம்முடிவை கைவிட வேண்டும் என்று ஈசன் வலியுறுத்தி னார். இதுபோல் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் தங்கள் புகார்களை தெரிவித்தனர்.