districts

img

மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் மீது தாக்குதல் கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நாமக்கல், நவ.16- சிபிஎம் கிளைச் செயலாளர் மீது  தாக்குதல் நடத்திய கந்துவட்டி கும் பல் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாமக்கல் மாவட்டம், ஆவரங் காடு கிளைச் செயலாளராக தர்மராஜ்  என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது கந்துவட்டி கும்பல் தாக்கு தல் தொடுத்துள்ளது. இதனைக் கண் டித்தும், பள்ளிபாளையம் வட்டாரத் தில் கந்துவட்டி மற்றும் நுண் நிதி நிறு வன ஊழியர்கள், பொதுமக்கள் மீது  தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரு வதை தடுத்த நிறுத்த வேண்டும். சிபிஎம் கிளைச் செயலாளர் மீது  தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று மாலை ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம், ஆவரங்காடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றி யக்குழு உறுப்பினர் தர்மராஜ் தலைமை வகித்தார். இதில் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. பெருமாள், ஒன்றியச் செயலாளர் லட் சுமணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ரவி, வாலிபர் சங்க ஒன்றியச் செய லாளர் நவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.