கோவை, டிச.7- பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி சரவணம் பட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், சரவணம் பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு குடிநீர் வசதி எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை என கூறப் படுகிறது. மேலும், பள்ளியின் கழி வறை சுகாதாரமற்ற நிலையில் உள் ளது. இதனால் மாணவிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என ஆசிரியர் களிடம் முறையிட்டால் எந்த நடவ டிக்கையும் எடுப்பதில்லை. மேலும், மாணவிகளுக்கு சரியாக நாப்கின் வழங்கப்படுவதில்லை. நாப்கின் கள் வந்தால், அதனை மாணவிக ளுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டை மாணவி கள் முன்வைக்கின்றனர். இதனையடுத்து, வியாழனன்று மாலை பள்ளி முடிந்தவுடன் மாணவ, மாணவியரும், பெற்றோர்களும், இந்திய மாணவர் சங்கத்தின் தலை மையில் சரவணம்பட்டி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது பள்ளி வளாகத்தில் கழிவறையை சுத்தம் செய்ய வேண் டும். குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். மாணவிகளிடம் அரு வறுக்கத்தக்க வகையில் பேசிய ஆசிரியர் மீதும், அவர் நடவடிக்கை எடுக்க தவறிய தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு வந்த காவல் துறை யினர், மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். உயர் அதி காரிகளிடம் இப்பிரச்சனை குறித்து தெரிவித்து, சம்பந்தப்பட்ட ஆசிரி யர்கள் உரிய மீது நடவடிக்கை எடுக் கப்படும் என, போலீசார் உறுதிய ளித்தனர். இதனால் மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு, கலைந்து சென்றனர். முன்னதாக, இப்போராட்டத் தில் இந்திய மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் அசாருதீன், மாவட்ட துணைச்செயலாளர் சந்தோஷ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். சுதா, மாவட்டப் பொருளாளர் உஷா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, ஒன்றியச் செயலாளர் முத்து முருகன் உட்பட திரளான மாண வர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.