கோவை, டிச.29- கோவை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு அரசு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது, என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை கிழக்கு மண்டல எஸ்ஐ எச்எஸ் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி யில் புதிய கட்டிடப் பணியை துவக்கி வைத்தல், உப்பிலிபாளையம் மாந கராட்சி நடுநிலைப்பள்ளியில் தரை தளம் மற்றும் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி, ராமநாதபுரம் 80 அடி சாலையில் ரூ.21 லட்சம் மதிப்பி லான ரேசன் கடை திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. மொத்தம் ரூ.30.93 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஞாயிறன்று துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியா ளர்களிடம் பேசுகையில், கோவை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு பணிகள் நடை பெற்று வருகின்றன. மேலும், தேவை யான பகுதிகளில் புதிய தார்சாலை கள் அமைக்க ரூ.200 கோடி நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக் கியுள்ளார். இதில், 100 கோடி ரூபாய்க்கு டெண்டர் முடிக்கப்பட் டுள்ளன. மேலும், 100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி கோரப் பட உள்ளன. கோவை மாநகராட்சி யின் வளர்ச்சி சிறப்பான வளர்ச் சியை கண்டுள்ளது. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று பாகுபாடு பார்க் காமல் அனைத்து பகுதிகளிலும் பணி கள் நடைபெற்று வருகின்றன. தமி ழக முதல்வர் புதிய பணிகளை அறி விப்பதோடு, அந்த பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை அடிக் கடி ஆய்வு செய்து வருகிறார். கோவையில் நடைபெற்று வரும் பணிகளை விமான நிலையத்தில் கூட அவர் அதிகாரியிடம் கேட்டு ஆய்வு செய்தார். மேட்டுப்பாளையம் சாலை மேம்பாலம் நீட்டிக்கப்படு வது குறித்து தேவைப்படின் நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மேயர் ரங்க நாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, துணைமேயர் வெற் றிச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.