திருப்பூர், ஜன. 25 – திருப்பூர் காங்கேயம் சாலை பகுதியில் சாலையோரம் வாய்க் கால் கட்டுமானப் பணியை முறை யாக திட்டமிடாமல் துண்டு துண் டாக நிறைவேற்றுவதால் வியாபாரி கள், பொது மக்கள் கடும் அவதிப்ப டுகின்றனர். மேலும் போக்குவரத் துக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகி றது. திருப்பூர் காங்கேயம் சாலை யில் சாலை விரிவாக்கப் பணியின் ஒரு பகுதியாக வாய்க்கால் கட்டு மானப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியை மேற் கொள்வதில் முறையாகத் திட்டமி டாமல் மேற்கொள்வதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக, ஏற்கெனவே இருக் கும் வடிகாலை அடைத்து வைத்து குறிப்பிட்ட நீளத்துக்கு புதிய வாய்க் கால் கட்டும் பணியை மேற்கொள்வ தற்கு பதிலாக, பழைய வடிகால் அடைக்கப்படாமல் சாக்கடை, கழி வுநீர் வெளியேறிச் செல்லும் நிலை யிலேயே புதிய வாய்க்கால் பணி மேற்கொள்ளப்படுகிறது. அத்து டன் பகுதி, பகுதியாக துண்டு துண் டாக இந்த வேலை செய்வதால் இங் குள்ள கடைகள், வர்த்தக நிறுவனங் கள், வீடுகள் ஆகியவற்றின் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து செல்ல முடியாமல், வாகனங் களை கொண்டு செல்ல முடியா மலும் பாதிக்கப்பட்டுள்ளனர். திட்ட மிட்ட முறையில் ஒவ்வொரு பகுதி யாக வேலையை செய்து முடித் தால் ஓரிரு நாளில் வேலை முடியும் எனத் தெரிந்து பொது மக்களும் தங் களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பொருத்துக் கொள்ள முடியும். ஆனால் பல நாட்களாக எந்த தக வலும் இல்லாமல் துண்டிக்கப்பட்ட நிலையில் செய்வதறியாது அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
காங்கேயம் சாலை சந்திப்பு மிகுந்த போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதியாகும். இதுபோன்ற பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாமலும் தடுப்புகள் ஏற்படுத்தி வைத்து வேலை செய்ய வேண்டும். ஆனால் தாறுமாறாக வாகனங் களை நிறுத்தி, வாகனப் போக்கு வரத்தையோ, பாதசாரிகளைப் பற் றியோ கவலை கொள்ளாமல் இந்த வேலை நடைபெறுகிறது. அத்துடன் சாலையோரம் இருக் கும் கட்டிடங்களுக்கு குடிநீர் விநி யோகக் குழாய்களில் இருந்து குடி நீர் குழாய் இணைப்பு வழங்கப்பட் டுள்ளது. இந்த இணைப்புகளை யும் வாய்க்கால் கட்டுவதற்காகப் பள்ளம் தோண்டியபோது தான டித்த மூப்பாக துண்டித்துள்ளனர். அதேசமயம் அந்த குழாய்களை மீண்டும் இணைப்பு கொடுப்பதற்கு தங்களிடம்தான் பணம் கட்டி இணைக்க வேண்டும். அதையும் உடனே செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக அப்பகுதி வாசிகள் கூறினர்.
இதுபோன்ற பணி செய்யும் போது ஒரு சில பாதிப்புகள் நேரிடு வது இயல்புதான். ஆனால் இங்கு திட்டமிட்டே இது போல் துண்டிக்கப் படுகிறதோ, பணம் பறிப்பதற்காக இப்படி செய்கிறார்களோ என்று சந்தேகம் ஏற்படுவதாக பாதிக்கப் பட்ட மக்கள் கூறுகின்றனர். நகர வளர்ச்சிப்பணி செய்யும் போது, அங்கு பணியின் தகவல் பலகை, பணியைத் தொடங்கி செய்து முடிக்கும் கால அளவு உள் ளிட்ட விபரங்கள் வைக்க வேண் டும். அத்துடன் ஒரு குறிப்பிட்ட பகுதி யில் இந்த வேலையால் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான மாற்று ஏற்பா டுகளும் செய்து தர வேண்டும். ஆனால் பொதுவாகவே திருப்பூ ரில் அதுபோல் நடைமுறைகளை ஒப்பந்ததாரர்களும் செய்வ தில்லை. மாநகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை என்றும் வர்த்தகர்கள் கூறினர். இப்பிரச்சனை குறித்து மாநக ராட்சி மேயர் தினேஷ்குமார், நேரடி யாக கவனம் செலுத்தி ஒப்பந்த தார்கள் செய்யும் பணிகளை முறைப்படுத்தவும், குறைகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் கூறினர்.