districts

img

பொதுத்துறைகளை விற்கும் மோடி அரசு: சிஐடியு போராட்டம்

சேலம், பிப்.9- பொதுத்துறை நிறுவனங்களை விற் கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து சேலம் உருக்காலை முன்பு சிஐடியு சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறைகளை விற்று பண மாக்கல் என்ற முடிவினை கைவிட வேண்டும். சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்க எடுக் கப்படும் தொடர் முயற்சிகளை கைவிட வேண்டும். பத்ராவதி உருக்காலை மூடு தலுக்கான உத்தரவை திரும்பப்பெற வேண்டும். தமிழ்நாட்டின் கோரிக்கை யான சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி மையம்  அமைக்க வேண்டும். செயில் தொழிலா ளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவாக இறுதிபடுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் உருக்காலை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தலை வர் கே.சித்தையன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐ டியு சேலம் உருக்காலை சங்க பொதுச் செயலாளர் கே.பி.சுரேஷ் குமார், சிஐ டியு மாவட்ட நிர்வாகி பி.பன்னீர்செல் வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.