திருப்பூர், அக். 12 - அனைத்துப் பிரிவு பாத்திரத் தொழி லாளர்களுக்கும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் தொகையை தீபாவளி பண்டிகைக்கு பத்து நாட்களுக்கு முன்பாக வழங்கு மாறு பாத்திர தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது. அனுப்பர்பாளையம் சிஐடியு பாத் திர சங்க அலுவலகத்தில் புதன்கிழமை சிஐடியு பாத்திர சங்கச் செயலாளர் கே. குப்புசாமி தலைமையில் அனைத்து சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்தில் சிஐடியு சங்கப் பொருளாளர் எம்.குபேந்திரன், எல்.பி. எஃப் நிர்வாகிகள் எம். ரத்தினசாமி, பி. வேலுச்சாமி, ஏடிபி நிர்வாகிகள் தேவ ராஜ், கலைமணி, ஏஐடியுசி சார்பில் எஸ். செல்வராஜ் எம்.சி., பி.நாகராஜ், எச்.எம். எஸ். கே.சுப்பிரமணியம், ஐ.என்.டி.யு.சி நிர்வாகி வி.ஆர்.ஈஸ்வரன், காமாட்சி அம்மன் சங்க நிர்வாகி எஸ்.பி.அர்ச்சு னன், ஆறுமுகசாமி, பி.எம்.எஸ் நிர்வாகி கள் ஏ.டி.சீனிவாசன், பி.ரமேஷ் ஆகி யோர் கலந்து கொண்டனர். இதில், அனைத்து பிரிவு பாத்திர தொழிலாளர்களுக்கும் கடந்தாண்டை விட கூடுதல் போனஸ் தொகை வழங்க வேண்டும், தேய்ப்பு தேய்க்கும் தொழி லாளர்களுக்கு ரூபாய் 2500 போனஸ் வழங்க வேண்டும், தீபாவளி பண்டி கைக்கு பத்து நாட்களுக்கு முன்பாக அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கும்படி பாத்திர பட்டறைதாரர்க ளையும், பாத்திரம் உற்பத்தியாளர்க ளையும் கேட்டுக் கொள்வது என இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.