தருமபுரி, டிச.8- தொடர்ந்து விவசாயிகள் விரோத சட்டங் களை இயற்றும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கண்டித்து 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதியன்று இரண்டாம் சுதந்திர போராட்டம் நடைபெற உள்ளது என அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் தெரிவித்துள் ளார். வேளாண் விளைப்பொருட்களுக்கு கட் டுப்படியான விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும். விவசாயிகள் கடனை தள் ளுபடி செய்யவும், மின்சார திருத்த மசோ தாவை ரத்து செய்யவும், வேளாண் விளை நிலங்களில் எண்ணெய் எரிவாயு குழாய் பதிப் பதை கைவிடக் கோரியும், வன உரிமைப் பாது காப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 ஆவது மாநாடு கேரள மாநிலம், திருச்சூரில் டிச.13 ஆம் முதல் டிச.16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி தெலுங்கானாவி லிருந்து துவங்கி திருச்சூர் செல்லும் வீரத் தெலுங்கான தியாகிகள் நினைவு ஜோதி தருமபுரி மாவட்டத்திற்கு வந்தடைந்தது. விவ சாயிகள் சங்கத்தின் அகில இந்திய நிதி செய லாளர் பி.கிருஷ்ண பிரசாத் தலைமையில் வந்த தியாகிகள் ஜோதி பயணக்குழுவிற்கு எழுச்சிகரமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வீரத்தெலுங்கானா போராட்டம்
இதனைத்தொடர்ந்து, ராமசாமி கோவில் அருகே வரவேற்பு கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாய சங்க ஒன்றிய தலைவர் பி.பி.ராஜா, ஒன் றிய செயலாளர் மாது ஆகியோர் உரையாற் றினர். இதைத்தொடர்ந்து நல்லம்பள்ளியில் நடைபெற்ற வரவேற்பு கூட்டத்தில் ஒன்றிய தலைவர் பி.பி.கந்தசாமி, ஒன்றிய செயலா ளர் முனியப்பன் ஆகியோர் வரவேற்று உரை யாற்றினர். இதில், பங்கேற்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிதி செயலாளர் பி.கிருஷ்ண பிரசாத் பேசுகையில், தெலுங் கானா போராட்ட தியாகி தொட்டி குமாரய்யா நினைவிடத்தில் ஜோதி பயணம் டிச.5 ஆம் தேதி துவங்கியது. தெலுங்கானாவில் 1946 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதியன்று, நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கம்மம், கோதாவரி பகுதிகளி லிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதற்கு எதிராக நில புரத்துவ குண்டர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் போராட்டம் நடத்தியவர்களை தாக் கினர்; துப்பாக்கி சூடு நடத்தினர். இதை எதிர்த்த வீரஞ்செறிந்த போராட்டத்தின் விளைவாக 3 ஆயிரம் கிராமத்தில் உள்ள மக் களுக்கு 10 லட்சம் ஏக்கர் நிலம் மீட்டு கொடுக் கப்பட்டது. தெலுங்கானா போராட்டம் போன்று கேரளா மாநிலம், கையூர் போரட்டம், மகா ராஷ்டிராவில் பழங்குடியினர் உரிமை மீட்பு போராட்டம், அசாம், பீகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் உரி மைக்கான போராட்டம் நடைபெற்றது. 1936 ஆம் ஆண்டில் உத்தர பிரதேசம் லக்னோ வில், விவசாயிகளின் உரிமைக்கான போராட் டம், சுதந்திர போராட்டம் தோழர்கள் பி.சுந்த ரய்யா, எம்.பசவபுன்னையா ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.
மண்ணை கவ்விய பாஜக
இக்காலகட்டத்தில் மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் 385 நாட்கள் போராட் டம் நடத்தினர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் விளைவாக மோடி வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெறுவதாக அறிவித்தார். பாராளுமன்றத்திலும் இச்சட்ட மசோதா திரும்பப்பெறப்பட்டது. மோடி அரசு அதானிக்கும், அம்பானிக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வரிசலுகை அளித்து, ஏழை கள் மீது வரி ஏய்ப்பு நடத்தியுள்ளது. ஏழை கள் நாடு பட்டியலில் 55 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, மோடி அரசின் 8 ஆண்டு கால ஆட்சியில் தற்போது 107 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தில்லி மாநாகராட்சியி லும், இமாச்சல பிரதேச மாநில தேர்தலிலும் பாஜக படுதோல்வியடைந்துள்ளது.
2 ஆம் சுதந்திர போராட்டம்
விவசாயிகளின் உற்பத்தி பொருட்க ளுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி 500 அமைப்புகள் கொண்ட அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி, இந்தி யாவின் இரண்டாம் சுதந்திர போராட்டம் நடை பெற உள்ளது. மோடி அரசின் மக்கள் விரோத விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து, நடைபெறும் இப்போராட்டத்தில் நாடு முழுவ தும் 5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்த போராட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் பங் கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். சேலம் இதேபோல் சேலம் மாவட்டம், அரியா கவுண்டம்பட்டியில் நடைபெற்ற ஜோதிகள் வரவேற்பு கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் சேலம் மேற்கு மாநகர செயலாளர் எம். கனகராஜ் தலைமை வகித்தார். இதில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், துணைத் தலைவர் எஸ்.கே.பிரீஜா, நிதி செயலாளர் கிருஷ்ண பிரசாத், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், துணைத்தலைவர்கள் டி.ரவீந்தி ரன், பி.டில்லிபாபு, சிபிஎம் மாவட்ட செயலா ளர் மேவை.சண்முகராஜா ஆகியோர் உரை யாற்றினர். இதில், 100க்கும் மேற்பட்ட பெண் கள் உட்பட திரளானோர் கலந்து கொண் டனர்.