கொழும்பு, மே 20-இலங்கை அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அந்நாட்டின் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேபிபி) தெரிவித்துள்ளது.அக்கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்கே நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஏப்ரல் 21 கொழும்புத் தாக்குதலுக்குப் பிறகு ரணில் விக்கிமசிங்கே அரசின் மீது நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. எனவே சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வழங்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பிரதமர் ரணிலை பதவியில் இருந்து நீக்கி இலங்கையில் அரசியல் குழப்பத்தைத் தொடங்கி வைத்தார் சிறிசேனா. பெரும் பரபரப்புக்குப் பின் பலமுறை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ரணில் பிரதமர் ஆனார். இம்முறை ஜேவிபி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.