districts

img

இறுதிக்கட்ட பணிகளில் உக்கடம் மேம்பாலம்

கோவை, ஜூன் 13- கோவை மாநகர மக்களாள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவை, உக்கடம் மேம்பாலப் இறுதி கட்டப் பணிகளை எட்டி உள் ளது. ஜூன் 15 அன்று தமிழக முதல் வர் கோவை வரும் நிலையில், இப் பாலத்தை திறந்து வைப்பார் என் கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் இருந்து  பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று  வட்டார பகுதிகள், வாளையாறு, பாலக்காடு மற்றும் அதன் சுற்று வட் டார பகுதிகளுக்கு செல்வதற்கு உக் கடம் – ஆத்துப்பாலம் சாலை முக்கி யமானதாக உள்ளது. இந்த சாலை  வழியாக தினந்தோறும் பல ஆயிரத் துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை யில் போக்குவரத்து நெரிசல் அதிக மாக இருப்பதால் உக்கடம் – ஆத் துப்பாலத்தை மக்கள் எளிதில் கடக் கும் வகையில், மேம்பாலம் கட்டப்ப டும் என கடந்த 2011 ஆம் ஆண்டு  தமிழக அரசு சார்பில் அறிவிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வரை 4 வழித்தட மேம்பாலம் அமைக்கும் வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து திட்ட வடிவத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு பணி கள் நடைபெற்று வந்தது. இதனைத்  தொடர்ந்து, ரூ. 127.50 கோடி மதிப் பில் திட்டப் பணிகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டது. பின்னர், மக் களின் கோரிக்கையை ஏற்று, கரும்புக்கடை, ஆத்துப்பாலத்தை கடந்து, பொள்ளாச்சி சாலை மற் றும் பாலக்காடு சாலைகளில் திரும்பும் வகையில் இந்த பால மானது நீட்டிக்கப்பட்டது. கொரோனா காரணமாக இந்த பாலம் கட்டுமானப் பணியில் சில காலம் தொய்வு ஏற்பட்டாலும், தற் போது கட்டுமானப் பணி விறு விறுப் பாக நடைபெற்று வருகிறது. 

இந்த பாலத்தின் பணிகள் அனைத்தும் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. ஆத்துப்பாலம் – உக் கடம் வரை முதல் பிரிவாகவும், ஆத் துப்பாலம் – பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, சுங்கம் சாலை  ஆகியவை நீட்டிக்கப்பட்ட பிரிவாக வும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் அனைத்தும் துரிதமாக  நடந்து வருகின்றன. ஆத்துப்பா லம் – உக்கடம் முதற் கட்டப் பிரிவில்  பணிகள் அனைத்தும் கடந்த மே மாதம் முடிக்கப்பட்டு விட்டன.

ஆத்துப்பாலத்தில் இருந்து  வரும் வாகன ஓட்டிகள் செல்வ புரம் பைபாஸ் சாலையை ஒட் டிய இடத்தில் இறங்கி, ஒப்பணக் கார வீதியை அடைந்து, செல்ல  வேண்டிய இடங்களுக்கு செல்லும்  வகையில் இந்த பாலமானது கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 

இந்த பாலத்துக்காக மொத்தம்,  125 தூண்கள் (பில்லர்) அமைக்கப் பட்டு இருக்கிறது. இந்த பாலம் ரூ. 360 கோடி ரூபாயில் கட்டப்பட்டு உள்ளது. இழப்பீட்டு தொகை என  அனைத்தையும் சேர்த்து இந்த பாலம் கட்டுமானப் பணி முடிக்க ரூ.  480 கோடி ரூபாய் செலவில் கட்டி  முடிக்கப்பட்டு உள்ளது. 

இந்த பாலத்தின் நீளம் 3.8 கி.மீ  ஆகும். நான்கு வழிச் சாலையாக 17.2 மீட்டர் அகலத்தில் இப்பாலம்  கட்டப்பட்டு உள்ளது. இப்பாலத் தில் மொத்தம் 8 இடத்தில் ஏற்ற, இறங்கு தளம் அமைக்கப்பட்டு உள் ளது. தற்போது இந்த சாலைப்பணி கள் அனைத்து பணிகளும் முடிந்து  உள்ளது. மிக விரைவில் இந்த பாலத்தில் சோதனை ஓட்டம்  நடத்தப்பட உள்ளது. இந்நிலையில்  முதல்வரின் கோவை வருகையை யொட்டி இப்பாலம் திறக்கப்பட லாம் என்கிற எதிர்பார்ப்பும் எழுந் துள்ளது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், பாலத்தின் மீது பொருத் தப்பட்டு இருந்த மின் விளக்குகள் எரியத் தொடங்கி மேம்பாலமே மின் ஒளியில் ஜொலிக்கிறது.