மேட்டுபாளையம், ஏப்.27- மேட்டுபாளையம் கல்லார் பகுதியில், குரங் குகளின் தாக்குதலில் காயமடைந்த இருவாச்சி பறவையை வனத்துறையினர் மீட்டு, சிகிச்சை யளித்து வனப்பகுதியில் விடுவித்தனர். மழைக்காடுகளில் காணப்படும் இருவாச்சி எனப்படும் இந்த ஹார்ன்பில் பறவைகள் அழித்து வரும் பறவைகள் இன பட்டியலில் உள்ளது. நீலகிரி மலையடிவார வனப்பகுதி யில் இந்த இருவாச்சி பறவைகள் பெருமளவு தென்படுகின்றன. இப்பறவையை காண ஏராள மான சுற்றுலா பயணிகள் சம்பந்தப்பட்ட காட்சி முனையிலிருந்து பார்த்து செல்வர். இந்நிலை யில், வியாழனன்று கல்லாரில் உள்ள தூரிப் பாலம் பகுதியில் ஒரு இருவாச்சி பறவை பறக்க இயலாமல் தத்தளித்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் வனத் துறையினர், இறகு பகுதியில் காயத்துடன் கிடந்த பறவையை மீட்டு வனத்துறை மரக் கிடங்குக்கு கொண்டு வந்தனர். பின்னர், வனத் துறை மருத்துவர்களின் ஆலோசனைப்படி பற வைக்கு ஊசியை செலுத்தி, காயத்தை விரைந்து குணப்படுத்தும் மருந்துகளை தடவினர். சிறிது நேரத்தில் உடல் நலம் தேறிய இருவாச்சி பறவை பறக்கும் நிலைக்கு திரும்பியது. இதனையடுத்து, கல்லார் மலையடிவார அடர்ந்த காட்டுப்பகுதிக்கு பறவையை எடுத்து சென்ற வனத்துறையினர், அதனை பாதுகாப் பாக விடுவித்தனர். மரத்தின் மீதிருந்த இரு வாச்சி பறவையை அங்கிருந்த குரங்குகள் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பறவைக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாகவும், உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளித்த காரணத் தால் காப்பற்றப்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.