ஈரோடு,பிப்.1- சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. நாமக்கல்லில் இருந்து துணி பண்டல்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று திங்களன்று காலையில் சென்னிமலை வழியாக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சென்னிமலையை அடுத்த கணுவாய் அருகே சென்றபோது அங்குள்ள வளைவில் திரும்ப முற் பட்டபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டு நர் மற்றும் கிளீனர் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பி னர். இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.