நாமக்கல், மே 7- குமாரபாளையம் அருகே தனியார் நூற் பாலைக்கு நூல் மூட்டை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் புறநகர் பகுதி யில், சேலத்திலிருந்து கொச்சின் வரை செல்லும் நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. கத்தேரி பிரிவு பகுதியில், தற்பொழுது மேம்பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதனால், சர்வீஸ் சாலையில் வாக னங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சேலத்தில் இருந்து தனியார் நூற்பா லைக்கு பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, எதிர்பாராத விதமாக அதிகபாரம் காரணமாக கோட் டைமேடு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கவிழ்ந்தது. இந்த விபத்தால் வாகனங்கள் ஒரு கிலோமீட்டர் தூரத் திற்கு நீண்ட வரிசையில் நின்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்து றையினர், உடனடியாக ஜேசிபி இயந்திரம் மற்றும் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் பஞ்சு மூட்டைகளையும், லாரியையும் அப்புறப்படுத்தி போக் குவரத்தை சீர் செய்தனர். அந்த லாரியின் ஓட்டுநர் அதி வேகமாகவும், செல்போன் பேசியபடியும் வந்ததா லேயே இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசார ணையில் தெரியவந்துள்ளது. லாரி கவிழ்ந்ததும் ஓட்டுநர் அப்படியே லாரியை விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.