districts

img

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சன்மானம்

கோவை, நவ.4- குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் நபர்களைக் கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்தும் டாஸ்மாக் ஊழிய ருக்கு தமிழக அரசு சார்பில் சன்மானம் வழங்கப்படும் என  அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அமைச்சர் முத்து சாமி, இருகூர் பேரூராட்சியில் முன் கள தூய்மைப் பணியா ளர்களுக்கு காலை உணவு திட்டத்தை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  முத்துச்சாமி, இருகூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியா ளர்களுக்கு காலை உணவுத் திட்டம் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளதாகவும், டாஸ்மாக்  ஊழியர்களுக்கான போனஸ் அனைத்து தர பணியா ளர்களுக்கும் கிடைக்கும் போது கிடைக்கும் என தெரி வித்தார். டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு, புகார்கள் வரும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அத்தகைய கடைகள் படிப்படியாக குறைக் கப்படும் என தெரிவித்தார். மேலும், முதல்வர் ஸ்டாலின் இதற்கும் ஒரு தீர்வை கொடுத்திருக்கிறார் என கூறிய அமைச்சர், மது கடைக்கு வரும் புதிய நபர்களை கண்ட றிந்து, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் டாஸ் மாக் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். அத்த கைய நபர்களை கண்டறிந்து கவுன்சிலிங் கொடுத்து மதுப்பிரி யர்களை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்க வேண்டுமென முதல்வர் கூறி இருக்கிறார். மது  விற்பனை மற்றும் புழக்கத்தை குறைக்க அனைத்து வகைக ளிலும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பாட்டி லுக்கு மேலாக 10 ரூபாய் வாங்கப்படுவது சில கடைக ளில் இருந்து வருகிறது. அதனை முழுவதுமாக குறைத்து  சரி செய்யப்படும். 95 சதவீதம் இந்த குறைபாடுகள் சரி செய் ்யப்பட்டுள்ளது, என்றார். முன்னதாக, பந்தையசாலை பகுதியில் 8 கிலோ மீட்டர் வாக்கத்தான் பயணத்தை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.