districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மாணவர் தற்கொலை

தருமபுரி, ஜூன் 26- தருமபுரி மாவட்டம், சின்ன மல்லிபட்டி கிராமத் தைச் சேர்ந்தவர் வடிவேல்.  இவரது மகன் அஜய்குமார், தருமபுரியில் உள்ள தனி யார் சிபிஎஸ்இ பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  படிக்காமல் செல்போன் உப யோகப்படுத்தி வந்த மகனை வடிவேல் கண்டித்துள்ளார். இந்நிலையில், ஞாயிறன்று அஜய்குமார் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டுள் ளார். இதுகுறித்து மதி கோன்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் முகாமல்ல; கண்துடைப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் குற்றச்சாட்டு

பொள்ளாச்சி, ஜுன் 26- பொள்ளாச்சி நகராட்சி  அலுவ லகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்ப்பு முகாம் எவ்வித முன்னேற்பாடு மின்றி அரசு பணத்தை வீணடித்த கண்துடைப்பு  முகாம் என மாற் றுத்திறனாளிகள் சங்கம் குற்றஞ் சாட்டியுள்ளது. கோவை மாவட்டம், பொள் ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்ப்பு முகாம் வெள்ளி யன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலை மையில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட தாலுகாவிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் கலந்து கொண்டனர். இதில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை,  வால்பாறை, கிணத் துக்கடவு வட்டாட்சியர்கள், வரு வாய்த்துறையினர் பங்கேற் றனர். இம்முகாமில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை,  பேருந்துவசதி அட்டை, இலவச  வீட்டு மனைபட்டா இருசக்கர வாக னம் உள்ளிட்ட  கோரிக்கை மனுக் களை அளித்தனர். வெறும் கோரிக்கை மனுக்களை பெறும் சம்பிரதாய முகாமாகவே நடை பெற்றதாக மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் ஆதங் கத்துடன் தெரிவித்தார்.  இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலசங்கத்தின் கோவை மாவட்ட பொருளாளர்  கே.மகாலிங்கம் கூறுகையில், பொள்ளாச்சி நகராட்சி அலுவல கத்தில் வெள்ளியன்று மாற்றுத்தி றனாளிகள் குறைதீர்ப்பு கூட்டம் வெறும் கண் துடைப்பானது. அடிப் படை மருத்துவர் கூட இம்முகா மில் பங்கேற்கவில்லை. மாற்றுத் திறனாளிகள் சரியான வழிகாட்டு தலின்றி அலைக்கழிக்கப்பட்ட னர். முறையான முகாமாக இம்மு காம் நடத்தவில்லை. தாலுகா வாரியாக நடத்த வேண்டும். மாற் றுத்திறனாளிகளுக்கான இருக்கை வசதிகள் மற்றும் உணவு வசதிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்தி ருக்க வேண்டும். குடிநீர் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிட  வசதி என எதுவும் முறையாக செய்து தரவில்லை. இம்முகாமி னால் அரசுக்கு தான் செலவு.  ஆனால் மாற்றுத்திறனாளிகளுக் கான பயன்பாடு மிகக்குறைவே. எனவே, மீண்டும் ஒருமுறை முறையாக அறிவித்து மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகை யில் தமிழக அரசு முகாமினை நடத்த வேண்டும். தாலுகா வாரி யாக கணக்கெடுப்பு செய்து,  மாற் றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் அடிப் படை வசதிகளை ஏற்படுத்தி, உணவு ஏற்பாடு செய்து முகா மினை நடத்திட வேண்டும், என் றார்.

பொள்ளாச்சி நகராட்சியில் எலக்ட்ரானிக் தொழிற்சாலை

1000 பெண்களுக்கு வேலை என எதிர்பார்ப்பு 

பொள்ளாச்சி, ஜூன் 26- பொள்ளாச்சியில் நகராட்சி சார்பில்  புதிதாக அமையவுள்ள எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் தயாரிக்கப் பயன் படும் தொழிற்சாலையில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப் பினர் கு.சண்முகசுந்தரத்தின் முயற்சி யால் பொள்ளாச்சி நகர பகுதியில் எலக்ட்ரானிக் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் அமைய உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிரந்தரமாக பணி புரிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் கள் தேவைப்படுகின்றனர். எனவே,  வரும் ஜூன் 29 ஆம் தேதியன்று பொள் ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள  என்ஜிஎம் தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாமிற்கான தேதி அறி விக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் 10 மற்றும் 12, டிப்ளமோ, டிகிரி கல்வித் தகுதியின் அடிப்படையில் ஆயிரம் பெண் களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும்  வகையில் திட்டம் உருவாக்கப்பட் டுள்ளது. இம்முகாமில் தேர்வாகும் பெண்க ளுக்கு தலைநகர் தில்லியில் ஆறு மாத காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியில் கலந்து கொள்ளும் அனை வருக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் உத வித்தொகையாக வழங்கப்படுகிறது என நகராட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நீலகிரியில் கனமழை:  மரங்கள் முறிந்து வீடுகள் சேதம்

உதகை, ஜூன் 26- நீலகிரியில் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்து 2 வீடுகள் சேதமடைந்தன. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிர மாக பெய்து வருகிறது. உதகை மற்றும் சுற்றுப்புற பகுதி களில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்து  வருகிறது. இதனால் முக்கிய சாலைகள், வீதிகளில் வெள் ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உதகை டம்ளர் முடக்கு பகுதியில் வீசிய சூறாவளி காற்று காரணமாக அங்கிருந்த  மரம் ஒன்று முறிந்து 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் 2  வீடுகளின் மேற்கூரையும் சேதமடைந்தது. இதில், நல்வாய்ப் பாக வீட்டிலிருந்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான வீரர்கள் மரங்களை வெட்டி அப்புறப் படுத்தினர்.

வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

உதகை, ஜூன் 26- நீலகிரி மாவட்டம், சேரம் பாடி வனச்சரகத்தில் சேரங் கோடு, காபிக்காடு, காவயல், கோல்ஸ்லேண்ட், கோஞ் சால் பகுதியில் 30க்கும் மேற் பட்ட யானைகள் முகாமிட் டுள்ளது. உதவி வனப்பாது காவலர் ஷர்மிளி மேற் பார்வையில் வனக்குழுவி னர் இப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர்- கோழிக்கோடு சாலையில், அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், பாது காப்பான பயணத்தை மேற் கொள்ள வேண்டிய அவசி யம் ஏற்பட்டுள்ளது. இத னால் யானைகளை ரசிப்ப தற்காக நிற்கவோ, புகைப் படம் எடுக்கவோ கூடாது  என அறிவுறுத்தி வருகின்ற னர்.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு  சுயபாதுகாப்பை உறுதிசெய்ய அறிவுறுத்தல்

திருப்பூர், ஜூன் 26- கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சுயபாது காப்பை உறுதிசெய்ய வேண்டும் என திருப்பூரில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று வேக மெடுத்து வருகிறது. கடந்த ஒரே வாரத்தில், 21 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இம்மாதத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தினசரி பாதிப்பு உயர்ந்து வருவதால், மருத்துவம் மற் றும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை தொடங்கி உள்ளனர். இது ஒருபுறம் இருக்க தமிழகத் தில் பிஏ 4 பிஏ 3 வகை கொரோனா வேகமாக பரவி வருவ தாக அமைச்சர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை  துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது, திருப் பூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் பிஏ 4. பிஏ 5 வகை  கொரோனா தொற்று உறுதியாகவில்லை. பரிசோதனையில் யாருக்காவது தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால், ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் கள், தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படு வர். தொற்று பாதித்த 28 பேரில் தற்போது 12 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மக்கள் பயப்பட வேண்டியதில்லை.  அதே நேரம் அலட்சியமாக இருப்பது பெரும் தவறு, வெளியி டங்களுக்கு செல்லும் போது தவறாமல் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொ ருவரும் சுயபாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என் றார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் புகார்  இணையதள முகவரி வெளியீடு

திருப்பூர், ஜூன் 26- பெண்கள், குழுந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க இணையதள முக வரி வெளியிடப்பட்டுள்ளது.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி கணினி வழி குற்றங் கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களை கையாளும் வகையில் இந்திய அரசு சைபர் கிரைம் ஒருங்கி ணைப்பு மையம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க நிர்பயா  நிதியின் கீழ் தேசிய இணைய வழி குற்றங்கள் முறையி டல் வலைதளமான www.cybercrimc.gov.inஎன்ற இணை யதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இணையவழி நிதி  மோசடிகள் தொடர்பாக புகார் அளிக்க தேசிய கட்டண மில்லா உதவி அழைப்பு எண் 1930 செயல்படுத்தப்பட்டுள் ளன. இந்த எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் ஊழியர்களிடம் தகராறு  தட்டிகேட்ட இளைஞர் மீது தாக்குதல் - 3 பேர் கைது

தாராபுரம், ஜூன் 26- தாராபுரத்தில் வீட்டு உபயோக பொருட் கள் விற்கும் நிறுவனத்தைச் சார்ந்த பெண் ஊழியர்களிடம் தகராறு செய்தவரை தட்டி கேட்ட இளைஞர் மீது தாக்குதல் நடை பெற்றது. இதனையடுத்து தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  திருநெல்வேலி மாவட்டம் கடையநல் லூர் பகுதியைச் சேர்ந்த இந்திரகுமார் (24),  இவர் தாராபுரம் எம்எஸ்பி நகரில் அறை  எடுத்து தங்கி வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் டெல்ரான் ஜிசிசி என்ற தனியார் நிறுவனத்தில் உதவிமேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இந் திரகுமார் தாராபுரம் பேருந்து நிலையம்  அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள் ளார். அப்போது, அதே வகை பொருள்கள் விற்கும் மற்றொரு இந்துஸ்தான் பவர் லிங்க் சவரா குரூப் நிறுவன ஊழியர்களான தென்காசி மாவட்டம் புளியரை செங் கோட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ராஜா  (23), தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதி யைச் சேர்ந்த துளசிராமன் (22), தென்கா சியை சேர்ந்த மணிகண்டன் (24), ஆகி யோர் இருந்துள்ளனர்.  இந்திரகுமார் அவர்கள் மூவரையும் பார்த்து தனது நிறுவனத்தில் பணி புரியும் பெண் ஊழியர்களை கிண்டல் செய்தது குறித்து தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திர மடைந்த ரமேஷ் ராஜா, துளசிராமன், மணிகண்டன் ஆகியோர், இந்திர குமாரை கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் இந்திரகுமார் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.  ரத்த வெள்ளத்தில் இந்திரகுமார் கீழே விழுந்து கிடப்பதை பார்த்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குபதிவு செய்த தாராபுரம் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட ரமேஷ் ராஜா, துளசிராமன், மணி கண்டன் ஆகிய மூவர் மீதும் 4 பிரிவின் கீழ்  வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறை யில் அடைத்தனர்.

நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பலி

திருப்பூர், ஜூன் 26- திருப்பூரில் வாளியில் உள்ள நீரில் மூழ்கி 11 மாத  குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே உள்ள அவிநாசி  நகர் பகுதியில், பீகாரை சேர்ந்த புதன்மார்கோ (29), இவரது மனைவி சன்விகா தேவி (27), ஆகியோர் வசித்து வரு கின்றனர். இவர்கள் குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத் தில் வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு தஞ்சன்  என்கிற 11 மாத குழந்தை உள்ளது.  இந்நிலையில் சனியன்று வழக்கம்போல புதன் மார்கோ வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் சண்டிகா தேவி யும், தஞ்சனும் இருந்துள்ளனர். தஞ்சனை தூங்க வைத்த  சன்விகா தேவி, அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப் பொழுது தூக்கத்தில் இருந்து எழுந்த தஞ்சன், எதிர்பாராதவி தமாக வீட்டின் முன்பு இருந்த வாளியில் தலை குப்புற விழுந் தார். வாளியில் நீர் இருந்ததால் குழந்தையால் கூச்சலிட முடியவில்லை. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து குழந்தையை மீட்டனர். அதைத் தொடர்ந்து குழந் தையை அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு குழந்தையை  பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

மூலப்பொருட்கள் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும் ஒன்றிய ஜவுளி அமைச்சர் பியூஸ் கோயலிடம் டீமா வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 26- திருப்பூரில் பனியன் மூலப் பொருள்க ளின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரு வதால் 60 சதவிகிதம் பனியன் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு சென்று விட்டன, எனவே மூலப் பொருள்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். ஞாயிறன்று திருப்பூருக்கு வருகை தந்த  ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் எம்.பி.முத்துரத்தினம் கோரிக்கை மனு அளித்தார். அதில். திருப் பூரில் 10 சதவிகித பெரிய நிறுவனங்களும், 90  சதவிகித சிறு நிறுவனங்களும் பனியன் உற் பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில், 60 சதவிகித நிறுவனங்கள் மூடும் சூழ லுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நூல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்வுதான். எனவே, மூலப்பொருட் கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒன் றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துரத்தினம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். முன்னதாக, திருப்பூரில்  ஏற்றுமதியாளர் கள் உடனான கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் ப்யூஷ் கோயல் பங்கேற்றார். திருப்பூர் அவிநாசி சாலை தனியார் அரங் கில் ஏற்றுமதியாளர்கள் உடனான கலந் தாய்வு கூட்டம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

தலைக்கவசம் அணியாததால் ரூ.10 லட்சம் அபராதம் வசூல்

சேலம், ஜூன் 26- வாகன விபத்தை தடுக் கும் வகையில் சேலம் வடக்கு மாநகரப்பகுதிக்கு உட்பட்ட ஏ.வி.ஆர், 5 ரோடு,சேலம் தெற்கு பகுதிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி, ஆட்சி யர் அலுவலகம் அருகில் விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. இதில் இருச்சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து அவர்களுக்கு முகா மில் வைத்து விபத்து குறித்து  அறிவுரை வழங்கப்பட்டது. 16 நாட்கள் நடத்த இந்த  சிறப்பு முகாமில் ரூ.10 லட்சம்  அபராதம் வசூலிக்கப்பட் டது. எனவே பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து காவல் துறைக்கு ஒத்து ழைப்பு தர வேண்டும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.