districts

img

சேந்தமங்கலம் லாக்அப் மரணம்: மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன. 21 - சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினரை கைது செய்ய வலியுறுத்தி திருப்பூரில் மாற் றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டம் நடத்தினர். சேலம் ஓமலூர் தாலுகா கருப்பூரைச் சேர்ந்த, இரு கால்களும் செயல் இழந்த மாற்றுத்திறனாளியான ஏ.பிரபாகரன் காவ லர்களின் கடும் தாக்குதலில் சித்தரவதை செய்யப்பட்டு மரணம் அடைந்தார். இதைக் கண்டித்து வியாழக்கிழமை திருப்பூர் கும ரன் சிலை முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக்கான சங்கத்தினர் கண் டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட தலைவர் டி.ஜெயபால் தலைமை யில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் சஞ்சீவ், கமலக்கண்ணன், லோகநாதன், ரோஸி, பாண்டியன் ஆகி யோர் முன்னிலையில் மாவட்ட செயலா ளர் பா.ராஜேஷ் கண்டன உரை ஆற்றி னார். இதில் மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.