districts

img

தருமபுரி: மருத்துவ சான்றிதழ் பெற மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு

தருமபுரி, மே 19- அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளி கள், துணையாருடன் பயணிக்க மருத்துவ சான்றிதழ் பெற அலைக்கழிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில், மாற்றுத்திறனா ளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திற னாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு  பேருந்துகளிலும், ரயில்களிலும் துணையா ருடன் பயணிக்க மருத்துவ சான்றிதழ் பெற  வேண்டும். மருத்துவ சான்றிதழ் பெற தரும புரி மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாதத்திற்க்கு இரண்டு முறை முகாம் நடை பெறுகிறது. இந்த முகாமிற்கு வரும் மாற்றுத் திறனாளிகளை தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு செல்லுங்கள் என கூறுகின்றனர். அரசு மருத்துவமனைக்கு சென்றால் மருத்து வர் இல்லை என்கின்றனர்.  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாற்றுத்திறனாளிகள்‌ தனது துணையாருடன் வந்து செல்கின்றனர். இன்று போய் நாளை வாருங்கள் என்று  அலைகழிக்கப்படுவதால் பண விரையம்  ஏற்படுவது மட்டுமல்லாமல் மன உளைச் சலுக்கும் ஆளாகின்றனர். புதனன்று அரூர் வட்டத்தில் இருந்து 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவ சான்றிதழ் பெற தருமபுரி அரசு  மருத்துவமனைக்கு வந்தனர்.சான்றிதழ் பெற பல மணி நேரம் காத்திருந்தும் மருத்து வர் வரவில்லை. இதையடுத்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் மருத்துவமனையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை தொடர்ந்து, மாற்றுத்திற னாளிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, அரூர் வட்ட தலைவர் காந்தி  ஆகியோரிடம் மருத்துவமனை கண்காணிப் பாளர் மருத்துவர் சிவக்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பின்னர், அனைவருக்கும் மருத்துவ சான்றி தழ் வழங்கப்பட்டது.