ரயில்கள் ரத்து: சேலம் கோட்டம் அறிவிப்பு
கோவை, ஜூலை 3- வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தால் ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறி வித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்க ளால் 2 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவையில் இருந்து அசாம் மாநிலம், சில் சார் செல்லும் வாராந்திர ரயில் (எண்: 12515) 10 ஆம் தேதியன்று கோவையில் இருந்து கவு காத்தி வரை மட்டுமே இயக்கப்படும். கவு காத்தி - சில்சார் இடையே ரத்து செய்யப்படு கிறது. இதேபோல் சில்சாரில் இருந்து கோவை வரும் வாராந்திர ரயில் (எண்: 12516) ஜூலை 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கவு காத்தியில் இருந்து கோவை இடையே இயக் கப்படும். இதேபோல், திருவனந்தபுரம் - சில்சார் வாராந்திர ரயில் (எண்: 12507) ஜூலை 5 மற் றும் 12 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் - கவுகாத்தி வரை மட்டுமே இயக்கப்படும். கவு காத்தி - சில்சார் இடையே ரத்து செய்யப் படுகிறது. சில்சார்- திருவனந்தபுரம் வாராந் திர ரயில் (எண்: 12508) ஜூலை 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கவுகாத்தி திருவனந்த புரம் இடையே மட்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை கோவை வரும் சட்டப்பேரவை ஏடு குழு
கோவை, ஜூலை 3- தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஏடுகள் குழு செவ்வா யன்று (நாளை) கோவையில் ஆய்வு மேற்கொள்ள உள்ள தாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஏடுகள் குழு செவ்வாயன்று (நாளை) கோவை வருகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழம் 2018-19 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை பேரவைக்கு காலதாமதமாக வைக்கப்பட்டது குறித்தும், 2019-20 மற்றும் 2020-21 ஆகிய 2 ஆண்டுகள் அறிக் கைகள் சமர்பிக்கப்படாமல் இருப்பது குறித்தும் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்யவுள்ளது. மேலும், ஊரக வளர்ச்சி மற் றும் ஊராட்சி கல்வி கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு மக ளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் 2013-14 ஆம் நிதியாண்டு முதல் 2019 -20 ஆம் நிதியாண்டு வரையிலான 6 ஆண்டுக ளுக்கு ஆண்டறிக்கை பேரவைக்கு தாமதமாக வைக்கப்பட் டது குறித்தும், 2020-21 ஆம் நிதியாண்டில் பேரவைக்கு ஆண்ட றிக்கை வைக்கப்படாமல் இருப்பது குறித்தும் அலுவலகத் தில் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைப்பாதையில் விபத்து: பெண் பலி
உதகை, ஜூலை 3- உதகை அருகே வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னதில் பெண் ஒருவர் உயிரி ழந்தார். நீலகிரி மாவட்டம், உத கையிலிருந்து சுற்றுலா வந்த வாகனம் உதகை - கல்லட்டி மலை பாதையில் சென்று கொண்டிருந்தது. இதில், 14 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் பயணித்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், பள்ளத்தில் கவிழ்ந்து விபத் துக்குள்ளானது. இவ்விபத் தில் திருநெல்வேலியை சேர்ந்த முத்துமாரி (24) என்பவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாலிபர் சங்க திருப்பூர் வடக்கு தாலுகா மாநாடு
திருப்பூர், ஜூன் 3- திருப்பூரி வடக்கு தாலுகா வாலிபர் சங்க மாநாடு ஞாயி றன்று தோழர் கே.தங்கவேல் நினைவகத்தில் நடைபெற் றது. திருப்பூர் வாலிபர் சங்க வடக்கு தாலுகா மாநாடு தோழர் கே. தங்கவேல் நினைவகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தாலுகா தலைவர் ஞானசேகர் தலைமை வகித்தார். பூர்ணா வரவேற்புரை நிகழ்த்தினார். கௌசிக் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். துவக்க உரையாக மாவட்ட தலைவர் பிரவீன் குமார் உரையாற்றினார். வாலிபர் சங்க வடக்கு நகர செய லாளர் பாலசுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினார். தாலுகா செயலாளர் ஹரிவேலையறிக்கை சமர்ப்பித்தார். இறுதியாக புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் கோகன் நிறைவுறையாற்றினார். தலைவராக கௌசிக், செயலாளராக கதிரவன், துணை தலைவர்களாக பொண்ணம்மாள், நாகரத்தினம் துணை செய லாளர்களாக மதி மற்றும் ஜீவா உட்பட 13 பேர் கொண்ட புதிய தாலுகாகமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது. இறுதியாக கதிரவன் நன்றி கூறினார். இதில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்
தாராபுரம், ஜூலை 3- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் ஆர். பாலச்சந்திரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங் குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக் கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 905 விவசாயி கள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர். திண் டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.10, ஆயிரத்து 56ம், குறைந்தபட்ச விலையாக ரூ.7ஆயிரத்து 250ம், சராசரி விலை யாக ரூ.8 ஆயிரத்து 660க்கும் விலை போனது. மொத்தம் 7618 முட்டைகள், ஆதாவது, 2 ஆயிரத்து 536 குவிண்டால் பருத்தி ரூ. 2 கோடியே 12 லட்சத்து 5 ஆயிரத்து 865க்கு விற்ப னையானது. இந்த ஏலத்தில் 17 வணிகர்கள் பங்கேற்றனர். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
வாலிபர் சங்க கிளை நிர்வாகிகள் தேர்வு
திருப்பூர், ஜூன் 3- திருப்பூர் கருவம்பாளையம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. தொடர்ந்து மாநாட்டில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் தலை வராக கிஷன், துணை தலைவராக கார்த்திகேயன், செய லாளராக சதீஷ்குமார், துணை செயலாளர் ஜி.நவீன், பொரு ளாளராக ஜெரோம், கமிட்டி உறுப்பினர்கள் 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இளம்பெண் மரணத்தில் சந்தேகம் அரசு மருத்துவமனை முற்றுகை
தாராபுரம், ஜூலை 3- தாராபுரம் அருகே இளம் பட்டதாரி பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பெண் ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெண்ணின் உறவி னர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையை முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குண்டடம் அடுத்த குள்ளாய்பாளையம் பகுதியை சேர்ந்த வர் சுகுமார் (30), கோழிப்பண்ணை உரிமையாளர். இவரது மனைவி லாவண்யா (27), பிகாம் பட்டதாரி. இவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றுள்ளது. இந்நிலையில் லாவண்யா நிறைமாத கற்பிணி யாக இருக்கும் போது குழந்தை பேறுக்காக தந்தை மாரியப் பன் வீட்டிற்கு சென்ற பின், கணவன் மனைவி இருவரும் கருத்துவேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.பிரசவத்திற்கு பின்பு சுகுமார் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை மற்றும் லாவண்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வந்த நாள் முதல் கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்சனை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த லாவண்யா சம்பவத்தன்று அதிகாலை யில் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த குண்டடம் காவல் ஆய்வாளர் ஆனந்த் லாவண்யாவின் உடலை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தார். இந் நிலையில், மகள் லாவண்யாவின் இறப்பில் சந்தேகம் உள்ள தாக கூறி லாவண்யாவின் தந்தை மாரியப்பன் தாராபுரம் கோட் டாச்சியர் குமரேசனிடம் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் ஆர்.டி.ஒ குமரேசன், குண்டடம் காவல் ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, லாவண்யா உறவினர்கள் சாவில் மர்மம் இருப்பதாகவும், சுகுமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தாராபுரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என கோட்டாச்சியர் தெரிவித்ததையடுத்து உறவினர்கள் உடலை பெற்று சென்றனர். இதனால் இரண்டு மணி நேரம் மருத்துவ மனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, குண்டடம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து லாவண்யாவின் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புகையிலை விற்ற 3 கடைகளுக்கு சீல்
திருப்பூர், ஜூலை 3- திருப்பூர் மங்கலம் சாலையில் மத்திய காவல் நிலையத் திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக புகையிலை பொருட்கள் விற்று வரும் கடைகளை கண்டறிந்து, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். அதன் அடிப்படையில், சட்ட விரோதமாக புகை யிலை பொருட்கள் விற்பனை செய்து வந்த டைமண்ட் தியேட் டர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் கருப்புசாமி (41), மங்கலம் சாலை பழகுடோன் பகுதியில் பெட்டி கடை நடத்தி வரும் வெங்கடேசன் (31) , சந்தைப்பேட்டை பகுதியில் பெட்டி கடை நடத்தி வரும் ரகு (22) ஆகியோரை சனியன்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மின் தடை
அவிநாசி, ஜூலை 3- நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15.வேலம்பாளை யம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடை பெறுவதால், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா. பச் சாம்பாளையம், பரமசிவம் பாளையம், ஸ்ரீராம் நகர், குமரன் காலனி, செட்டிபா ளையம், சோளிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, ஜீவா நகர், அன்ன பூர்ண லேஅவுட், திருமுரு கன்பூண்டி, துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், விஜிவி நகர், அணைப்பு தூர், டிடிபி மில் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, அவிநாசி மின்வாரிய செயற் பொறியாளர் தீ.விஜயஈஸ்வ ரன் தெரிவித்துள்ளார்.
தமிழக வனத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் வனக்காப்பாளர்களுக்கு பதவி உயர்வு
திருப்பூர், ஜூன் 3- 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி யாற்றி வரும் வனக்காப்பாளர்க ளுக்கு, வனவர் பதவி வழங்க வேண் டும் என தமிழக அரசுக்கு வனத்துறை யினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையில் வனக்காப்பா ளர்கள் முழுமையாக களப்பணியாற் றுபவர்கள். குறிப்பிட்ட வனப்பகுதி யில் வனவிலங்குகள் வந்தால் அவற்றை கண்காணிப்பது, யானை, புலி, சிறுத்தை உள்ளிட்டவைகளிட மிருந்து மீட்புப்பணி, மரம் உள்ளிட் டவை விழுந்தால் அவற்றை சீரமைப் பது உட்பட அனைத்து பணிகளை யும் வனக்காப்பாளர்கள் தான் செய் வார்கள். 24 மணிநேர களப்பணியா ளர்கள். வனவர்கள் 4 முதல் 5 வனக் காப்பாளர்களை கண்காணிப்பது தான் பணி. தமிழகம் முழுவதும் 8 முதல் 12 ஆண்டுகள் பணியாற்றிய வனக்காப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதற் கான ஊதியமும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக வனத்துறையில் பணியாற்றும் சிலர் கூறும்போது, “2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 தொடங்கி 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை, நேரடி நியமன வனக்காப்பாளர்களாக பணியில் சேர்ந்த வனக்காப்பாளர்களின் எண் ணிக்கை, சுமார் 300 ஆகும். தமிழ்நாடு வனச்சார்நிலை பணி விதிகளின்படி, தகுதிகாண் பருவம் முடித்து பணி வரன்முறைசெய்து 6 மாத வனக்காப் பாளர் பயிற்சி நிறைவு செய்து, குற்றத் தாள்கள் ஏதும் இல்லாமல் 8 ஆண்டு கள் பணி நிறைவு செய்திருந்தால், வனவராக பதவி உயர்வு பெறலாம் என்பது விதி. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி யோடு 220 பேரும், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியோடு 63 பேர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியொடு 10 பேர் முழுத்தகுதி பெற் றுள்ளனர். இதில் அதிகப்படியான பணியாளர்கள் பணியில் சேரும் போது, சுமார் 35 வயது மேற்பட்டவரா கவும், 40 வயதுக்கு உட்பட்டரா கவும் வேலைவாய்ப்பு அலுவலகத் தின் மூலம் பிளஸ் 2 அறிவியல் பாடப் பிரிவு தேர்வு பெற்றதின் அடிப்படை யில், பணி அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் 47 வயது முதல் 52 வயதை எட்டி உள்ளனர். இந்நிலை யில் கொரோனா பெருதொற்று கார ணமாக, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. தமிழக வனத்துறையில் வனக்கா வலர், வனக்காப்பாளர், வனவர் மற் றும் வனச்சர அலுவலர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் நேரடி நியமனம் மூலமாக பணியாளர்களை தேர்வு செய்வதாலும், வனவர் பணி இடமானது குறைவாக உள் ளது. வனவர் பதவி உயர்வுக்கு காத்திருக்கும் வனக்காப்பாளர்க ளின் எண்ணிக்கை அதிகமாக இருப்ப தாலும், வனக்காப்பாளர்கள் 12 ஆண் டுகள் பணி நிறைவு செய்தும், ஒரு முறை கூட பதவி உயர்வு வழங்கப் படவில்லை. அதேபோல் இதில் பலர் 50 வயதை எட்டியதால், வனவர் பதவி உயர்வுக்கு காத்திருக்கும் 300 வனக்காப்பாளர்களின் நலன் கருதி, நேரடி நியமன வனவர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண் டும். ஒருமுறை விதிதளர்வின் படி, அனைவரையும் வனவராக பதவி உயர்வு வழங்க வேண்டும். அதே போல் போலீஸாருக்கு வழங்கியதை போல், வனக்காப்பாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சுழற்சி அடிப்ப டையில் விடுப்பு, மாவட்டத்துக்குள் பயணிக்க இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட வசதிகளை செய் துதர வேண்டும் என்றனர்.
ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி
திருப்பூர், ஜூலை 3- திருப்பூர் அருகே தண்ட வாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார். திருப்பூர் அருகே வீட்டு தோட்டம் பகுதியில் ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறை யினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என் பது குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
ஆடிப்பட்டம் காய்கறிகளுக்கான விலை அறிவிப்பு
ஆடிப்பட்டம் காய்கறிகளுக்கான விலை அறிவிப்பு கோவை, ஜூலை 3- ஆடிப்பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறி விப்பை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஆடிப் பட்டம் முக்கிய மானாவாரி சாகுபடி பருவமாகும். இந்த கால கட்டத்தின் பயிர் உற்பத்தி தென்மேற்குப் பருவ மழையை சார்ந்துள்ளது. பெரும்பாலும் தானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கறிகள் ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யப் படுகின்றன. இந்த பருவத்தில் காய்கறி பயிரிடும் விவசாயி களுக்கு உதவியாக விலை முன்னறிவிப்புத் திட்டம் வெளி யிடப்படுகிறது. வேளாண் பல்கலைக்கழக விலை முன்ன றிவிப்புத் திட்டத்தின் கீழ் ஒட்டன்சத்திரம் சந்தையில் கடந்த 14 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக் காய் விலைகள் தொடர்பாக சந்தை ஆய்வு மேற்கொள்ளப் பட்டதன் அடிப்படையில், அறுவடையின்போது தரமான தக் காளியின் பண்ணை விலை கிலோ ரூ.20 முதல் ரூ.23 வரை யும், கத்திரிக்காயின் விலை ரூ.25 முதல் ரூ.27 வரையும், வெண்டைக்காயின் பண்ணை விலை கிலோ ரூ.15 முதல் ரூ.18 வரையும் இருக்கும் என்று அறியப்படுகிறது. இந்த சந்தை ஆலோசனைகளின்படி விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்கலாம். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தையோ, காய்கறி பயிர்கள் துறைத்தலைவரையோ அல்லது 0422 2431405, 6611278, 6611374 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்பாடு பணிகள் தீவிரம்
கோவை, ஜூலை 3- கோவை மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறுவதை யொட்டி, வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் ஒரே கட்டமாக உள்ளாட்சி இடைத் தேர்தல் ஜூன் 9 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அப்பகுதிகளில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இத்தேர்தலில் 2,652 ஆண் வாக்காளர்களும், 2,868 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒரு வர் என மொத்தம் 5,521 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மொத்தம் 11 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட் டுள்ளது. அங்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் வாக்களிக்க வசதியாக சாய் தளம் உள்ளிட்டவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓய்வூதியம் வழங்கப்படாததால் முதியவர் அவதி
ஈரோடு, ஜூலை 3- ஓய்வூதியம் பெற்று வந்த முதி யோர்கள் உதவித்தொகை திடீ ரென நிறுத்தப்பட்டுள்ளதால் முதிய வர்கள் பெரும் அவதிக்குள்ளாகி யுள்ளனர். ஈரோடு மாநகர், வைரபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கல் யாணி. 67 வயதான இவர் கடந்த சுமார் 6 ஆண்டுகளாக முதியோர் ஓய் வூதியம் பெற்று வந்தார். கணவரை இழந்து, வாரிசு எவரும் இல்லாத இவருக்கு ஓய்வூதியம் தான் பிழைப் பூதியம். வழக்கம் போல இந்த மாதம் வங்கிக்குச் சென்ற போது இவரது வங்கி கணக்கிற்கு இந்த மாதம் வர வேண்டிய ஓய்வூதியம் வரவில்லை. கல்யாணி தனியாக வாடகை வீட் டில் வசித்து வருகிறார். அருகில் வசிப் பவர்களின் உதவியுடன் காலத்தைக் கடத்தி வரும் இவருக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. இந்நிலை யில் இவர் வசிப்பிடத்தின் அருகி லுள்ளவர் துணையுடன் வட்டாட்சி யர் அலுவலகம் சென்று கேட்டார். அங்கு இரண்டு சிலிண்டர் வைத்தி ருக்கிறார். எனவே இவர் வறுமைக் கோடு பட்டியலுக்கு கீழ் இல்லை. ஆகவே முதியோர் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்க இயலாது எனக் கூறியுள்ளனர். மேலும் தொடர்ந்து ஓய்வூதியம் பெற வேண்டுமென்றால் ஒரு சிலிண்டர் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஆரம்பத்தில் ஒரு சிலிண்டர் இணைப்பு மட்டுமே கல்யாணி பெற்றி ருந்தார். இவருக்கு உதவி செய்வ தாக நினைத்து ஒருவர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பதிவு செய்து என்ற பெயரில் மற்றொரு இணைப்பை இல வசமாக பெற்றுக் கொடுத்துள்ளனர். இதனால் ஓய்வூதியம் பெற முடிய வில்லை என சமையல் எரிவாயு இணைப்பு வழங்கியுள்ள பாரத் கேஸ் ஏஜென்சிக்கு சென்று ஒரு சிலிண்டர் மட்டும் போதும் மற்றொன்றை திரும் பப்பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அப்படி ஒரு சிலிண் டரை மட்டும் திருப்பி எடுக்க மாட் டோம். இரண்டையும் திருப்பிக் கொடுத்து விடுங்கள். அதன் பிறகு புதிதாக வைப்புத் தொகை செலுத்தி ஒரு சிலிண்டர் மட்டும் புதிய இணைப்பு பெறுங்கள் எனக் கூறியுள் ளனர். காது கேளாத, திக்கித் திக்கி வாய் பேசும் இவருக்கு தமிழக அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தை விட்டால் வேறு எந்த வழியும் இல்லை. இந்நிலையில் ரூ.4500 செலுத்தி புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறுவது என்பது இயலாத காரியம். எனவே, கல்யாணியைப் போன்ற பல வயோதிகர்களின் வாழ்நிலை ஆட் டம் கண்டுள்ளது. இதுகுறித்து வட்டாட்சியர் அலு வலகத்தைத் தொடர்பு கொண்ட போது, நேரில் வந்து பாருங்கள் என பதில் வந்தது. நேரில் சென்ற கேட்ட தற்கு இப்போது நேரமில்லை என திருப்பு அனுப்பியுள்ளனர். வயது முதிர்ந்த நிலையில் ஓய்வூதியமே தனக்கு வாழ்வாதாரமாக இருந்த நிலையில் அதனையும் இழந்து பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார். உடனடியாக தமிழக அரசு தலையிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குண்டு மல்லி விலை சரிவு
சேலம், ஜூலை 3- சேலம் மாவட்டத்தில் குண்டு மல்லிகை, சன்ன மல்லிகை, கனகாம்பரம், அரளி, சம்பங்கி உள்பட பல வகையான பூக்கள் பரவ லாக சாகுபடி செய்யப்படு கிறது. இப்பகுதிகளில் சாகு படி செய்யப்படும் பூக்கள் சேலம் வஉசி பூ மார்க்கெட் டில் விற்பனை செய்யப்படு கிறது. இதனிடையே வரத்து அதிகரித்துள்ளதால் பூக்க ளின் விலை சரிந்துள்ளது. குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.200க்கு சரிந்துள்ளது. இதேபோல் கனகாம்பரம், சாமந்தி, அரளி, நந்தியாவட் டம் உள்ளிட்ட பூக்களின் விலைகளும் சரிந்துள்ளது.