districts

img

பெட்ரோ கெமிக்கல்ஸ் பயிற்சி

தருமபுரி, ஜன.22- தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் வேதியியல் துறை இளங்கலை, முதுகலை பெட்ரோ கெமிக்கல்ஸ் பயிற்சி மற் றும் தொழில்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கோ.கண்ணப்பன் தலைமை வகித்தார். கல்லூரி கல்வித் துறை மண்டல இணை இயக்குநர் ராமலட்சுமி முன்னிலை  வகித்தார். வேதியியல் துறை தலைவர் ரா.கிருபாகரன் வர வேற்றார். நாகப்பட்டினம் கலிலியோ வாசன் ஆப் ஷோர் நிறுவ னத்தின் மேலாண் இயக்குநர் சீனிவாசன், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக வேதியியல் துறை மாணவர்கள் தொழில் துறை பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பெற உறுதுணையாக இருக்கும். மேலும் பெட்ரோலியம் துறையில் வேதியியல் மாணவர்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி விரிவு ரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வேதியியல் துறை பேராசிரி யர்கள் மு.வெண்ணிலா, கா.வெங்கடாசலம், பாலகிருஷ் ணன் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், 600க்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.