உடுமலை, மார்ச் 12- சாலைகளை விரிவுப டுத்த அளவீடு செய்து ஆறு ஆண்டுகள் ஆன பின்பும் விரிவு படுத்தாத சாலையால் போக் குவரத்து நெரிசல் அதிகரித்து வாகன ஓட்டிகள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். உடுமலை தாலூகா, தளி பேரூராட்சி பகு தியின் வழியாக மிகவும் முக்கியதுவமான சுற்றுலா தலமான திருமூர்த்தி அணை, ஆனைமலை மற்றும் அண்டை மாநிலம் பாலக்காடு செல்ல அதிகமான பொது போக் குவரத்துகள் பயன்படுத்தும் வழியாக தளி போரூராட்சி சாலை உள்ளது. இந்த சாலைகள் மிகவும் குறுகியதாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற் பட்டு வருகின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு சாலை விரிவாக்க செய்ய அள வீடு செய்யப்பட்டது. ஆனால், தற்பொழுது வரை சாலை விரிவாக்கம் செய்ய எவ்வித நட வடிக்கையும் எடுக்காமல் இருப்பது பொது மக்களுக்கு மிகுத்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணி களின் நலன் கருதி விரைவில் தளி பேரூ ராட்சி சாலைகளை விரிவு படுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.