districts

img

அடிப்படை வசதிகளற்ற திருமூர்த்தி அணை முகம் சுளிக்கும் சுற்றுலா பயணிகள்

உடுமலை, ஜன.15- அடிப்படை வசதிகளற்ற திரு மூர்த்தி அணை மற்றும் பூங்கா விற்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. உடுமலையில் இருந்து  20 கிலோ மீட்டர் தொலைவில்  திருமூர்த்தி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில்  மலை அடிவாரப் பகுதியில் அமணலிங்கேஸ்வரர் கோவிலும், அடிவார பகுதியில் இருந்து  சுமார் மூன்று கிலோ மீட் டர் தூரத்தில்  மலையின் மீது  செயற் கையாக அமைக்கப்பட்ட பஞ்ச லிங்க அருவியும், மேல்நீராறில் இருந்து திருமூர்த்தி அணைக்கு  தண்ணீர் வரும் சீர்மட்ட கால்வாய் பகுதியில் பூங்கா, நீச்சல் குளம் மற் றும் அணையில் படகு சவாரி என சுற்றுலா பயணிகளை கவரும் வகை யில் அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு இயற்கை எழில் கொஞ்சும் திருமூர்த்தி அணை பகு தியை பார்வையிட தினமும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், சினிமா பட பிடிப்புகளும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இப்படி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் உள்ள திருமூர்த்தி மலையில் அடிப் படை வசதிகள் என்பது பெயர ளவிற்குகூட இல்லை என சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். செயல்படாத படகு சவாரி  குறிப்பாக, மலைக்கு மேல் இருக்கும் பஞ்சலிங்க அருவியில் பெண்கள்  உடை மாற்றும் தனி அறை பயன்படுத்த முடியாத நிலை யில்  சிதலமடைந்து கணப்படுகிறது. இதேபோல், அணையில் தளி பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் சுற்றுலா பயணிகள் பயணம் செய்யும் வகையில் படகு சவாரி தொடங்கபட்டது. ஆனால், முறை யான பரமரிப்பு இல்லாமல் போன தால் பல ஆண்டுகளாக படகு சவாரி இயக்கப்படாமல் உள்ளது. பூட்டிக்கிடக்கும் பூங்கா அணையின் கரையோரப் பகுதி யில் 1994 ஆம் ஆண்டு  உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின் நிதியில் ஐந்து தலை பாம்பின் வாயில் இருந்து தண்ணீர் வரும் வகையில் அழகிய நீச்சல்குளம் கட்டப்பட்டது.  தற்பொழுது நீச்சல் குளம் சிதலம டைத்து பராமரிக்க ஊழியர்கள் இல்லாமல் மோசமாக காணப்படு கிறது. இதேபோல், சீர்மட்ட கால் வாய் அருகே  இரண்டு பூங்கா உள் ளது. இங்கு தளி பாளையம் எத்தலப்பர் என வரலாற்று முக்கி யத்துவம் வாய்ந்த சிலைகள் மற் றும் சிறுவர்கள் விளையாட்டு ஊஞ் சல் உள்ள பூங்காக்கள் பூட்டி வைத் துள்ளனர். மேலும், சுற்றுலா பய ணிகள் வரும் வாகனங்களை நிறத்துவதற்குகூட முறையாக இடம் ஒதுக்கப்படவில்லை. இத னால் இங்கு வரும் சுற்றுலா பயணி கள் வாகனங்களை  மலை அடிவாரப் பகுதியில் தான் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. கண்டிப்பான வசூல் அதேநேரம், திருமூர்த்தி அணைக்கு வரும் சுற்றுலா பய ணிகளிடம் ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக வசூல் செய்யப்படு கிறது. கோவில் நிர்வாகத்தின் மூலம் வாகனங்களுக்கு ரூ.5 முதல் ரூ.100 வரை வசூல் செய்யப்படு கிறது. மேலும் நீச்சல் குளம், படகு சவாரிகளுக்கு தனி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், இங்கு வரும் சுற்றுலா பயணிக ளுக்கு அடிப்படையான வசதிக ளான குடிநீர், கழிப்பிடம் மற்றும்  வாகன நிறுத்தும் இடம் என எந்த வசதிகளும் செய்துதரப்படுவ தில்லை. ஆகவே, திருப்பூர் மாவட்ட சுற் றுலா துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் திருமூர்த்தி அணை யில் போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என்பதே சுற்றுலா பய ணிகளின் கோரிக்கையாக உள் ளது. -கே.மகாதேவன்