districts

img

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

பென்னாகரம், பிப்.15- ஒகேனக்கல் அருவியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுற் றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற் றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். தமிழகத்தின் புகழ்பெற்ற சுற் றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக் கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் பகு திக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களில் இருந்தும், கர்நாடநா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல் வேறு வெளி மாநிலங்களில் இருந் தும் சுற்றுலா பயணிகள் வருகை தரு கின்றனர். இதற்கிடையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா  பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட நிர்வாகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒகேனக்கல் அருவி களில் குளிக்க சுற்றுலா பயணிக ளுக்கு தடை விதித்தது. மேலும், ஒகேனக்கல் பிரதான அருவி செல் லும் நடைபாதை பூட்டப்பட்டு காவ லர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வந்தனர். அதேநேரம், தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகள் அருவி யில் குளிக்க தடை தொடர்ந்து நீட் டிக்கப்பட்டு வந்ததால், காவிரி ஆற் றின் கரையோரப் பகுதிகளில் குளித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒகே னக்கல் அருவிகளில் சுற்றுலா பய ணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி அனுமதி வழங்கியுள்ளார். இத னால் ஒகேனக்கல் பகுதிக்கு வந்தி ருந்த சுற்றுலா பயணிகள் அருவிக ளில் குளித்து மகிழ்ந்தனர்.