districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
 

சேலம், ஜூலை 28- விடுமுறை தினமான ஞாயிறன்று, ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான சேலம் மாவட் டத்திலுள்ள ஏற்காட்டிற்கு, கடும் பனிமூட்டம் மற்றும் மழை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப் பட்டது. இந்நிலையில், ஏற்காட்டில் நிலவி வந்த பனிமூட்டம் கலைந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிறன்று சுற்று லாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் ஏற்காடு படகு இல்லத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், சுற்று லாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் அதிகள வில் வந்ததால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவிரி கரையோர பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

காவிரி கரையோர பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு நாமக்கல், ஜூலை 28- காவிரி கரையோரத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் இடத்தில் நாமக்கல் ஆட்சியர் ச.உமா ஆய்வு மேற்கொண் டார். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை  காரணமாக கர்நாடகா மாநிலத்திலுள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி, மேட்டூர்  அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை தற்போது சுமார்  110 அடியை நெருங்கியதைத் தொடர்ந்து, விநாடிக்கு 12  ஆயிரம் கனஅடி நீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட் டுள்ளது. இந்நிலையில், காவிரி ஆறு பாயும் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிக ளில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளான  கலைமகள் வீதி, இந்திரா நகர், பாலக்கரை, அண்ணா  நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ச.உமா  ஞாயிறன்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட நாட்டான் கவுண்டன் புதூர், ஜனதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோ ரம் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் ஆய்வு செய் தார். அப்பொழுது தேவையின்றி ஆற்றுக்கு செல்லக் கூடாது. ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ரேசன் கார்டு  உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் மற்றும் அத்தியா வசியப் பொருட்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள  வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். இந்த  ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, குமார பாளையம் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள், நக ராட்சி பொறியாளர் ரேணுகா ஆகியோர் உடனிருந்தனர்.

நெடுஞ்சாலை ஆணையத்தை உருவாக்கும் முடிவை கைவிட சாலைப் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

கோபி, ஜூலை 28- மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை உருவாக்கும் முடிவை கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்  பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க கோபி உட்கோட்ட 9  ஆவது பேரவை கூட்டம் ஞாயிறன்று கோபிச் செட்டிப்பாளைத்தில் உள்ள அரசு ஊழியர்  சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு உட்கோட்டத் தலைவர் மா. பழனிவேலு தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஜி.பெருமாள் வரவேற்றார். அரசு  ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ச.விஜய மனோகரன் சிறப்புரையாற்றினார்.சங்கத் தின் மாநிலச் செயலாளர் எஸ்.செந்தில்நாதன்  நிறைவுரையாற்றினார். இக்கூட்டத்தில் நெடுஞ் சாலைகளை பராமரிக்க கிராமப்புற இளை ஞர்களை சாலைப் பணியாளர்களாக நிய மிக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை  ஆணையத்தை உருவாக்கும் முடிவை  கைவிட வேண்டும். சாலைப் பணியாளர்க ளுக்கு ஊதியத்தில் 10 விழுக்காடு ஆபத்துப் படி, நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும்.  தனியார் முதலாளி சுங்கவரி வசூல் கொள் ளையை அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காட்டுயானைகளை விரட்டும் பணியில் வனத்துறை

உதகை, ஜூலை 28- தேவர்சோலை கொட்டாய்மட்டம் குடியிருப்பு பகுதிகள்  அருகே முகாமிட்டுள்ள காட்டுயானைகளை விரட்டும் பணி யில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ள னர். இரவு நேரங்கள் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் குடி யிருப்புப் பகுதிகளில் உலா வரும் காட்டுயானைகளால் பொதுமக்கள் வெளியே வர தயங்குகின்றனர். இந்நிலை யில், தேவர்சோலை குடியிருப்பு அருகே உள்ள தேயிலைப்  தோட்டப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை வனத்துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் கண்கா ணித்து, அதை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர். ட்ரோன் சத்தத்தை கேட்டு காட்டுயானைகள் ஒன் றன்பின் ஒன்றாக வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோ காட்சி  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.