districts

img

குப்பையில் கொட்டப்படும் தக்காளி

பொள்ளாச்சி, பிப்.7- பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில், தக்காளி வரத்து அதிகரிப்பால் குப்பையில் கொட்டப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்று வாட்டார கிராமங்களில் கடந்த ஆண்டில், தென் மேற்கு பருவமழையை யொட்டி ஜூன் மாதத்தில் தக்காளி சாகுபடி அதிகமாக இருந்தது. குறிப்பாக, வடக்கிபாளை யம், சூலக்கல், நெகமம், முத்தூர், பொன்னாபுரம், தாளக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி அறுவடை பணி செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றது. இதன்பின் வடகிழக்கு பருவமழை பல நாட்கள் தொடர்ந்து பெய்ததால், சில கிராமங்களில் செடியிலேயே பழுத்த தக்காளிகள் தரையில் விழுந்து அழுக துவங்கியது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. தற்போது மழை இல்லாமல் வெயிலின் தாக்கத்தால், தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரமாக தக்காளி விளைச்சல் அதிகரித்து, மார்க்கெட்டுக்கு அதன் வரத்து வழக்கத்தைவிட அதிகமானது. இதனால், தற்போது மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் அதிகபட்சமாக ரூ.10 வரை மட்டுமே விற்பனையாகிறது. வரத்து அதிகரிப்பு வழக்கத்தைவிட அதிகமாவதால், விலை கட்டுபடியாகாமல் தக்காளியை குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது, என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.