தஞ்சாவூர் அக்.20- தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் பொது நூலகமாக்கப்பட்டதன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி திங்கட்கிழமை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற வுள்ளது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு உலகப் பொதுமறை நூல் திருக்குறளை தாமிரப் பட்டயத்தில் வெளியிடவுள்ளார். வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு சரஸ்வதி மகால் நூற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிடவுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் நூற்றா ண்டு நிறைவு விழா நினைவு அஞ்சல் தலையினை வெளியிடவுள்ளார். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செய லாளர் பிரதீப் யாதவ், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் பொது நூலகமாக்கப் பட்டதன் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அக்.20, 21, 22 ஆகிய தேதி களில் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று நாட்களிலும் 50 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற் பனை செய்யப்படவுள்ளது. மேலும் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெறும் அக் 21 மாலை 3 மணி முதல் கருத்த ரங்கம் மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகளை பார்வை யிட்ட மாவட்ட ஆட்சியர், அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணி களை சிறப்பாக மேற்கொள்ளும்படி தெரிவித்தார். ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஷ்வரன், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(கட்டங்கள்) சிவகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.