districts

img

நேற்றைய வரலாறு தெரியாமல் இன்றைய வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாது

ஈரோடு, நவ. 21-  நமது மெய்யான சரித்திரத்தை மாணவர் களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். பிற  மதவெறுப்பு என்கிற பெயரில் இந்துக்களில் உள்ள அடித்தட்டு மக்களை ஒடுக்கப்பார்க் ்கிற கூட்டத்தினரிடையே எச்சரிக்கை உணர்வு  அவசியம் என பேராசிரியர் அருணன் உரை யாற்றினார்.  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்கு ழுவின் சார்பில் சுதந்திர தின பொன்விழா மற்றும் நிகரில்லா சுதந்திர போராளி திப்பு சுல்தான் பிறந்த நாள் சமூக நல்லிணக்க கருத்தரங்கம் சத்தியமங்கலத்தில் ஞாயி றன்று நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு, மாநில உதவி தலைவர் ப.மாரிமுத்து தலைமை தாங்கினார். ஹாஜி எஸ்.ஏ.ஜஹாங்கீர் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில அமைப்பாளர் பேராசி ரியர் அருணன் சிறப்புரையாற்றினார்.  பேர.அருணன் பேசுகையில், நேற்றைய வரலாறு தெரியாமல் இன்றைய வாழ்க்கை யைப் புரிந்து கொள்ள முடியாது. கல்லூரி மாணவர்களிடத்திலும் திப்புவின் பெருமை களை எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் மாணவர்களைப் பிடிக்கும் வேலையை ஒருவர் செய்து கொண்டிருக்கிறார். அவர் களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் நாம் சத்தியத்தை, மெய்யான சரித்திரத்தைச் சொல்ல வேண்டும்.  நான் லண்டனில் இருக்க நேர்ந்த போது  பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்குச் சென்றேன். அதில் இந்திய பகுதிக்குப் போனேன். அங்கு திப்பு சுல்தான் போட்டி ருந்த ஆடையையும், வாளையும் வைத்திருக் கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சிம்ம சொப்பனாகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான். அவர்களை இந்தியாவில் காலூன்ற விடமால் செய்ய கடுமையாக முயற்சித்தவர் திப்பு. அவரை வீழ்த்தியதன் சாட்சியமாக இதை வைத்துள்ளனர். 

வெள்ளையர்களை எதிர்த்த நாலாவது போரில் தலைமை தாங்கிய வெள்ளைத் தளபதி திப்பு வீழ்ந்தான் என்று அறிந்து கூச்ச லிட்டான், இப்பொழுது இந்தியா எங்களு டையது என்றான். அப்படிப்பட்ட சுதந்திர போராளி திப்பு. அதனால் தான் இந்துத்துவா கோஷ்டிக்கு திப்புவைப் பிடிக்கவில்லை. ஏனென்றால் வெள்ளைக்காரனை எதிர்க்காத கோஷ்டி அது. அதனால்தான் திப்புவின் பிறந்த நாளை கொண்டாடுவது தப்பு என்கின் றனர். மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்க்காரை கொண்டாடுகிறார்கள். வெள்ளைக்காரனை எதிர்த்து போராடிய திப்பு சுல்தான் மோசமா னவர் என்கிறார்கள். திப்புவின் மதம் இசுலாம் தான். ஆனால் அவரிடம் காசாளாராக இருந் தவர் கிருஷ்ணாராவ். அவனுடைய தபால் மற் றும் போலீஸ் அமைச்சர் சடைய ஐயங்கார். அவருடைய சகோதரர் ரங்க அய்யங்காரும் ஒரு அதிகாரி. மிக முக்கிய பதவியான மீர் ஆசப் பில் இருந்தது முருகையா. மற்றொரு பதவியில் இருந்தவர் சுப்பாராவ். அனைத்து  மக்களுக்கும் பதவிகளைக் கொடுத்தார்.  ஆனால் திப்புவின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம், அவர் யார் யாரை நம்பினாரோ அவர்களே துரோகம் செய்தார்கள் என்ப துதான்.  1782-1799 காலத்தில் திப்பு கோயில்க ளுக்கு 34 சன்னல்களை அளித்தார் என்று  மைசூர் கெசட் கூறுகிறது. சன்னல் என்றால் நிலம், நகைகள், அரிய பொருட்கள் என்று அர்த்தம். அதில் தங்க, வெள்ளி தாம்பா ளங்களும் உண்டு. சத்தியமங்கலம் கோயி லிலும் திப்புவின் பெயர் பொறிக்கப்பட்ட தாம் பாளங்கள் உண்டு. அந்த அளவிற்கு சமய நல்லிணக்கம் மிக்கவர் திப்பு. இப்படி ஒரு பறந்து, விரிந்த மனது, மத நல்லிணக்கம் கொண்டிருந்த திப்புவின் பிறந்த நாளை கொண்டாட மாட்டேன் என்றால் ஆதிசங் கரரே உங்களை மன்னிக்க மாட்டார். 

இந்தியாவில் 80 சதவிகிதம், தமிழ் நாட்டில் 88 சதவிகிதம் இந்துக்கள் என்று தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதி வாகியுள்ளது. இந்துத்துவா சனாதன சக்தி கள் எப்படி முஸ்லிம்களுக்கு, கிறிஸ்த வர்களுக்கு எதிரானவர்களோ அதேபோல இந்துக்களுக்கும் எதிரானவர்கள். இந்துத் துவவாதிகள் இந்துக்களுக்கான ஆட்சி  நடத்துகிறார்களா? சமையல் எரிவாயு விலை ரூ400 லிருந்து ரூ1100 ஆகியுள்ளது. இந்துக்க ளுக்கான ஆட்சி என்றால் இந்துக்களுக்கு தள்ளுபடி உண்டா? தாழ்த்தப்பட்ட, பழங்கு டியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனை வரும் இந்துக்களாகத் தான் உள்ளனர். இவர் கள் மீனாட்சி அம்மன் கோவிலில் நுழைய முடியாது. இவர்கள் கோவில் நுழைவு உரிமை வேண்டும் என்று போராடிவர் காந்தி போன்றவர்கள். கூடாது என்றவர்கள் சனாத னிகள். எல்லா மக்களும் கோவில் அர்ச்சக ராக முடியுமா! ஜீயர் மடத்தின் தலைவ ராக முடியுமா. இந்த மதவெறியர்கள் பிற மத வெறுப்பு என்று சொல்லி சொந்த மதத் தின் அடித்தட்டு மக்களை ஒடுக்கப் பார்க்கிறார்கள். இந்த மதவெறியர்கள் பிற மத வெறுப்பு என்று சொல்லி சொந்த மதத்தின் அடித்தட்டு மக்களை ஒடுக்கப்பார்க்கிறார் கள். மத நல்லிணக்கம் என்பது நம் வாழ்வின் ஆதாரம். நமக்கு மட்டுமல்ல, மத நல்லிணக் கம் இல்லாத நாடு இருந்தால் நம் பிள்ளைக ளின் கதி என்னவாகும் என்பதை யோசித்து பாருங்கள். ராஜராஜன் பற்றி சொல்வதைப் போல நாம் திப்பு சுல்தானைப் பற்றியும் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்று நிறைவு செய்தார்.  முன்னதாக இந்நிகழ்வில், ஸ்ரீவாசவி கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனை வர் எஸ்.ஜெயசங்கர், தமிழக மக்கள் ஒற் றுமை மேடையின் சார்பில் கே.துரைராஜ், எஸ்.ஜமேஷ், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் கே.எஸ்.இஸாரத் அலி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், போட்டித் தேர்வு இலவச பயிற்சி மைய ஒருங் கிணைப்பாளர் ஏ.ஹாத்திம்தாய் நன்றி கூறி னார்.