districts

img

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி

கோவை, அக்.30- அனைத்து அத்தியாவசியப்  பொருட்களின் விலை உயர்வை கண் டித்து கோவையில் செவ்வாயன்று  அனைத்த்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பண்டிகை காலங்களில் அத்தியா வசியப் பொருட்களை பொது விநியோ கத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள்  மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். ஒன்றிய அரசு  பொது விநியோகத் திட்டத்திற் கான நிதியை உடனடியாக மாநிலங்க ளுக்கு வழங்க வேண்டும். பெட் ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகி யவையின் விலை உயர்வை கட் டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த மாதர் சங்க மாநி லக் குழு அறைகூவல் விடுத்திருந் தது. இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம், பெரிய நாயக்கன்பாளையம், கோவை வடக்கு, கிழக்கு, எஸ்எஸ் குளம், பீளமேடு, சூலூர் மற்றும் பொள்ளாச்சி என மாவட்டத்தில் 13  இடங்களில் பஜார் என்ற பெயரில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து நாமம் போட்டு, காய்கறிகளை மாலையாக அணிந்து  எண்ணெய் இல்லாத சமையல், மண் ணில் விதவிதமான பலகாரங்கள் செய்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  இதில், மாவட்டத்தலைவர் ஜோதிமணி, செயலாளர் சுதா, பொரு ளாளர் உஷா, மாநிலக் குழு உறுப்பி னர் ராஜலட்சுமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.