districts

img

வானிலை முன்னறிவிப்புக்கு டிஎன் அலர்ட் செயலி

திருப்பூர், அக்.14- பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புகள் குறித்த தக வல்களை உடனுக்குடன் பெற தமிழ்நாடு அரசின் அதிகாரப் பூர்வ செயலியான டிஎன் அலர்ட் செயலியை பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம். இந்த செயலியில் பேரிடர் காலங்களில்  பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் புகார்களையும் பதிவு செய் யலாம் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள் ளார்.  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச  பேரிடர் துயர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் காலங் களில் பாதுகாத்து கொள்வதற்காக முன்னெச்சரிக்கை நட வடிக்கை குறித்து தீயணைப்புத்துறை அலுவலர்களால் நடத் தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியை திங்களன்று மாவட்ட  ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் பார்வையிட்டு, தெரிவித்ததா வது, பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புகள் குறித்த  தகவல்களை உடனுக்குடன் பெற தமிழ்நாடு அரசின் அதிகா ரப்பூர்வ செயலியான டிஎன் அலர்ட் என்ற செயலியை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இந்த  அலை பேசி செயலி பொதுமக்களுக்கு வெப்ப நிலை, மழை போன்ற  வானிலை முன்னறிவிப்புகளை தமிழில் வழங்குகிறது. நான்கு  நாட்களுக்கு முன்னரே வானிலை குறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம். பேரிடர் காலங்களில் பாதிப்புக் குள்ளான பொதுமக்கள் புகார்களை பதிவு செய்து கொள்ள லாம். மேலும்,  வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து உத விக்கு மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் 24×7 மணி நேரமும் செயல்படும்  அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற கட்டண மில்லா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.