திருப்பூர், ஜன.12- புத்தக திருவிழாவை முன்னிட்டு பள்ளிக ளில் திருப்பூர் வாசிக்கிறது என்ற தலைப்பில் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று ஆர்வத்துடன் புத்தங் களை வாசித்தனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின் னல் புக்டரஸ்ட் நடத்தும் 20 ஆவது திருப்பூர் புத்தகத்திருவிழாவை முன்னிட்டு மாணவர்க ளிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவு பெறும் பள்ளி கள் மற்றும் தனியார் பள்ளிகளில் வெள்ளி யன்று “திருப்பூர் வாசிக்கிறது” என்கிற தலைப்பில் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று புத்தகங்களை வாசித்து மகிழ்ந்தனர். இதுகுறித்து பெரிச்சிபாளையம் மாநக ராட்சி பள்ளி ஆசிரியர் கனகராஜா கூறுகை யில், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிக ளிடம் வாசிப்பு திறனை அதிகரிக்க இது போன்ற புத்தக வாசிப்பு நிகழ்வுகள் மிகவும் அவசியம். புத்தக வாசிப்பு குழந்தைகளின் மத்தியில் நினைவாற்றலை அதிகரிக்கிறது. தொடர் வாசிப்பின் மூலம் கற்பனைத் திறன் அதிகரிக்கிறது. மேலும், பிழையில்லாமல் எழுத மிகவும் உதவுகிறது. தொடர்ந்து புத்த கம் வாசிப்பதன் மூலம் ஒரு பக்கத்தில் இருக் கக்கூடிய ஒவ்வொரு வார்த்தையை எழுத் துக்கூட்டி வாசிக்க வேண்டிய அவசியம் இல் லாமல் போகும். ஒவ்வொரு வார்த்தையும் சித் திரமாக மூளையில் பதியப்பட்டுள்ளன. அவற்றை எழுத்துக்கூட்டாமலே வாசித்து விட்டு, அடுத்தடுத்து வரக்கூடிய வார்த்தை களை சரியாக நிரப்ப வாசிப்பு பழக்கம் மிகவும் அவசியம். தொடர் வாசிப்பின் மூலம் மாணவ, மாணவிகள் பாடங்களின் பொருளைப் புரிந்து கொள்வது எளிமையாக்கும். தொடக் கப் பள்ளி மாணவர்கள் வாசிக்கும் பட கதை கள் அவர்களின் கற்பனைத் திறனை அதிகரிக் கிறது. குழந்தைகள் பெரும்பாலும் படம் பார்த்து கதை சொல்லும் புத்தகங்களையே அதிகம் வாசிக்க விரும்புகின்றனர். படத்தை பார்த்து அவர்களே கதையை கூறுகின்றனர். இது மாணவர்கள் மத்தியில் உரையாடலை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.