districts

10,11 ஆம் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முன்னேற்றம்

திருப்பூர் மே 20 - பத்தாம் வகுப்பு அரசு பொதுதேர் வில் திருப்பூர் மாவட்டம் 93.93 சதவீதம்  தேர்ச்சி பெற்றுள்ளது. இதன் மூலம் மாநில அளவில் 11 ஆவது இடத்தை பெற்றுள்ளது. 11 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர் வில் 96.38 சதவிகிதம் தேர்ச்சி பெற்று  மாநிலத்தின் முதல் இடத்தை பிடித்துள் ளது. கடந்தாண்டு மாநிலத்தில் 29 ஆவது இடத்தைப் பெற்ற திருப்பூர், இம் முறை 11 ஆவது இடத்தை பெற்று முன் னேற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற் றும் பதினோராம் வகுப்பு அரசு பொது  தேர்வு முடிவுகள் வெள்ளியன்று அறி விக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொது  தேர்வு முடிவுகள் காலை அறிவிக்கப் பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டத் தில் 93.93 சதவீதம் வெற்றி பெற்றுள்ள னர். இது கடந்த ஆண்டை விட 5.47  சதவீதம் அதிகம் ஆகும்.  மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு  (எஸ்.எஸ்.எல்.சி) அரசு பொதுத் தேர்வு  கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி  தொடங்கி 20ஆம் தேதி வரை நடந்தது.  இத்தேர்வை திருப்பூர் மாவட்டத்தில், 312 பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து  67 மாணவர்கள், 15 ஆயிரத்து 85 மாணவி யர் என மொத்தம் 30 ஆயிரத்து 152 பேர்  எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் ஆன் லைன் மூலம் வெளியிடப்பட்டது. திருப் பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு  பொதுத்தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 152  பேரில், 13 ஆயிரத்து 785 மாணவர்கள், 14  ஆயிரத்து 538 மாணவியர் என மொத்தம்  28 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.93 ஆகும். இது  கடந்த ஆண்டை விட 5.47 சதவீதம் அதி கம் ஆகும். தேர்வு எழுதிய மாணவர்க ளில் 91.49 சதவீதம் பேரும், மாணவியர்க ளில் 96.37 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற் றுள்ளனர். அதேபோல் மாநில அளவில் நடை பெற்ற பதினோராம் வகுப்பு அரசு  பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட் டத்தை பொருத்தவரை 96.38 சதவீதம்  தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலி டத்தை பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட் டத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வில்  10 ஆயிரத்து 999 மாணவர்களும், 13  ஆயிரத்து 233 மாணவிகளும் என மொத் தம் 24 ஆயிரத்து 232 பேர் தேர்வு எழுதி னர். இதில் 10 ஆயிரத்து 441 மாணவர்க ளும், 12ஆயிரத்து 915 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 356 பேர்  தேர்ச்சி அடைந்தனர். இதில் மாணவர் கள் 94.93 சதவீதமும், மாணவிகள் 97.60  சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதி 96.38 சதவீதம் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித் துள்ளது குறிப்பிடத்தக்கது.