திருப்பூர், ஜன.29- திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 20 புத்தகத் திருவிழாவில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள் ளது.
சிறைவாசிகளுக்காக புத்தகம் சேகரிக்கும் அரங்கம்:
சிறைவாசிகள் பயன்பெறும் வகையில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை சார்பில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 20 ஆவது புத் தக திருவிழாவில் புத்தகங்களை தானமாக பெற அறை எண் 20 ல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட சிறை நூலகத்திற்கு நூல்கள் சேகரிக்கும் வகையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக திருவிழாவில் 3000 புத்தகங்கள் நன்கொடை யாக பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு புத்தக திருவிழா தொடங்கி 4 நாட்களில் இதுவரை 300 புத்தகங்கள் நன்கொடையாக இந்த அரங்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சுய ஒழுக்கம், சுய முன்னேற்றம், ஆன்மீகம், கவிதை தொடர்பான புத்தகங்கள் அதிக அளவில் வருவதாக அரங்க அலுவலர் தெரிவித்தார். சிறைச்சாலைகளுக்கு புத்த கம் தானமாக அளிப்பது வரவேற்கத்தக்கது. சூழ்நிலைகளால் குற்றம் செய்வோர் மனம் திருந்தி மீண்டும் மறுவாழ்வு பெற புத்தகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. பொதுமக்கள் தங்க ளிடம் உள்ள புத்தகங்களை கொடுத்து உதவிட வேண்டும் என புத்தங்களை தானமாக அளித்த சிலர் தெரிவித்தனர். மெய் நிகர் உலகம்: குழந்தைகள் மத்தியில் வாசிக்கும் திறனை அதிகரிக் கவும், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகை யில் அறை எண் 100 திருப்பூர் மாவட்ட பொது நூலக துறை சார்பில் மெய் நிகர் உலகம் என்ற அரங்கம் அமைக்கப்பட்டுள் ளது. இதில், விண்வெளி, கடல் வாழ் உயிர்கள், காடுகள் மற் றும் வன விலங்குகள் உள்ளிட்டவற்றைப் பள்ளி குழந்தைகள் காணும் வகையில் விஆர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படு கிறது. 360 டிகிரி கோணத்தில் காண ஏராளமான குழந்தைகள் வருவதாகவும், இதுவரை 2000க்கும் மேற்பட்ட பள்ளி குழந் தைகள் வந்து சென்றுள்ளதாக அரங்க அலுவலர்கள் தெரிவித் தனர்.
கிராமப் புற பெண்களின் உற்பத்தி பொருட்கள்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட் டம் சார்பில் கிராமப் புற மகளிர் குழுக்களில் உள்ளவர்கள் உற் பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும் வகையில் இந்த புத்தகக் கண்காட்சியில் அரங்கம் அமைக்கப்பட்டுள் ளது. திருப்பூர், உடுமலை உட்பட மாவட்ட முழுவதும் உள்ள மகளிர் குழுக்களின் மூலம் மானியத்துடன் கடன் அளிக்கப்படு கிறது. மேலும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஆண்டுக்கு ஐந்து முறை மாநில, மாவட்ட அளவில் பலவேறு பகுதியில் கண்காட்சிகள் அமைக்கப்ப டும். அந்த வகையில் திருப்பூர் புத்தக கண்காட்சியிலும் அரங் கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், புடவைகள், மசாலா வகை கள், துணிகள், பலகாரங்கள் உள்ளிடவைகள் காட்சி படுத்தப் பட்டிருந்தது.
மருத்துவ விழிப்புணர்வு அரங்கம்:
பொதுச் சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ காப்பீட்டு திட் டம், 48 மணி நேர அவசர சிகிச்சை திட்டம், மகப்பேறு மருத்துவ விழிப்புணர்வு, மக்களை தேடி மருத்துவம் உட்பட அனைத்து வகை அரசு காப்பிட்டு திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சிக்கு வருகை தருபவர்களுக்கு இதுகுறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
ஒப்பந்த கூட்டுறவு சங்க அரங்கம்:
ஒப்பந்த கூட்டுறவு சங்கம் சார்பில் நடைபெறும் பணிகள் குறித்தும், கட்டுமானம், உட்கட்டமைப்பு பராமரிப்பு, வங்கி கட்டிட முகப்பு மற்றும் நவீனப்படுத்துதல், பழைய பழுத டைந்த தளவாட சமன்ங்கள், உபயோகப்படுத்தப்பட்ட பேரல் கள், வாகன டயர்கள் மற்றும் டியூப்கள் ஆகியவற்றை சேகரித் தல் போன்ற பணிகள் கூட்டுறவு துறையில் பதிவு செய்த உறுப் பினர்களுக்கு எவ்வாறு பயன் தருகிறது ஆகியவை குறித்து எடுத்துரைக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கூட்டுறவு துறையில் ஒப்பந்த ஊழியர்கள் பதிவு செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படு கிறது.
ஆயுதக் கண்காட்சி:
திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் ஆயுத கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில், எஸ்எல்ஆர், கண் ணீர்ப் புகை குண்டுகள், கையெறி குண்டுகள், ஏகே47 உட்பட பல்வேறு வகையான ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள் ளது. கலவரங்களை கட்டுப்படுத்துவது, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து காவலர்கள், வரும்பொதுமக்க ளுக்கு எடுத்துரைக்கின்றனர்.