திருப்பூர், ஏப். 2- திமுக தலைமையிலான இந்தியா கூட்ட ணியின் திருப்பூர் மக்களவை தொகுதிக் கான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட் பாளர் கே.சுப்பராயன் ஞாயிறன்று மாலை திருப்பூர் மாநகரம் மூன்றாவது வார்டு பகுதி யில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை அண்ணாச்சி வாக னத்தை மறித்து குறைகளை சொன்னார். அதை செவி மடுத்த வேட்பாளர் கே.சுப்ப ராயன் திங்களன்று காலை 7 மணிக்கு, திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஸ்கு மார், மண்டலத் தலைவர் கோவிந்தராஜ், மூன்றாவது வார்டு மாமன்ற உறுப்பி னர் லோகநாயகி கருப்புசாமி, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் துரைசாமி ஆகி யோரை சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரில் அழைத்து சென்று,பகுதி மக்களை நேரில் அழைத்து விசாரித்தபோது, அவர்கள் ரோடு வந்து விட்டது, பாதாள சாக்கடை வசதி வேண்டும் என்று கூறினர். அதை கேட்டுக் கொண்ட வேட்பாளர் பாதாள சாக்கடை திட்டம் ஏற்கனவே மாமன்றத்தின் திட்டத்தில் உள்ளது. தேர்தலுக்கு பின்னர் அது படிப்படியாக உங்கள் பகுதிக்கும் விரிவு படுத்தப்படும் என்று கூறினார். இதற்கு பகுதி மக்கள் நன்றி கூறினர்.