districts

img

பொய் நெல்லைக் குத்தி பொங்கல் வைத்தவர்கள்....

திருப்பூர் மாநகரின் பெருமை மிகு அடை யாளங்களில் ஒன்று ஜெய்வாபாய் மாநக ராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி. 80  ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டில் 5600 மாணவிகள் படித்து வருகின்றனர். ஏழை, எளிய, சாமா னிய தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளின் கல் விக்கு ஆதாரமாக இப்பள்ளி உள்ளது. 129  ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தின் மூலம் 14 ஆசிரியர்கள் என மொத்தம் 143 ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றிய இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர். தேசிய குழந்தைகள் அறி வியல் மாநாட்டில் பங்கேற்று பல முறை விரு துகள் பெற்றுள்ளனர், இப்பள்ளி மாணவி கள். மழைநீர் சேகரிப்பு குறித்து அப்பள்ளி மாணவிகளின் ஆய்வுக் கட்டுரை, அப் போதைய முதல்வர் ஜெயலலிதாவின் பாராட் டைப் பெற்றதுடன், தமிழக அளவில் மழைநீர் சேகரிப்புக் திட்டத்தை அரசு அமலாக்கவும் தூண்டுகோலாக அமைந்தது. நொய்யல் ஆறு சாயக்கழிவுநீர் பிரச்சனை, சுற்றுப்புறச் சூழல் உள்பட பல்வேறு பயன் தரத்தக்க ஆய்வுகளையும், தீர்வுகளையும் திருப்பூர் சமூகத்துக்கு வழங்கியது இப்பள்ளி. இத்துடன் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வு களுக்கு தனிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த இரு கல்வி ஆண்டுகளில் மட்டும் 10  பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ  படிப்பில் சேர்ந்துள்ளனர். குழந்தைகள் மனச் சோர்வு, அழுத்தத்தில் இருந்து விடுபட வாரம் ஒரு முறை மனநல மருத்துவர் பள்ளிக்கு வந்து  தனிப்பட்ட முறையில் பரிசோதனை, சிகிச்சை  அளித்து வருகிறார். இப்படி பல முன்னோடி  திட்டங்களை செயல்படுத்தி முன்மாதிரிப் பள் ளியாக உள்ளது.

மதவெறி சக்திகள் குறி!

நல்ல விதமாக செயல்படும் எதுவுமே  சிலருக்குப் பிடிக்காது, எரிச்சல் ஏற்படும். அதை எப்படியாவது சீர்குலைக்க விரும்பு வார்கள், குரங்கு  கை பூமாலை போல கசக்கி  எரிய துடிப்பார்கள். அப்படித்தான் இந்த பள்ளியையும் குறி வைத்துள்ளனர் சிலர். குறிப்பாக, பெரியாரின் “பெண் ஏன் அடிமை யானாள்?” என்ற புத்தகத்தை இப்பள்ளி மாண விகளுக்கு வழங்கியதை மாபாதகச் செயல் போல பாஜகவினர் பிரச்சனை ஆக்க முயன்ற னர். பெண்கள் அடிமைத்தனமாக இருக்கக்  கூடாது, விழிப்புணர்வு பெற வேண்டும் என் றால் அவர்களுக்குப் பிடிக்காது தானே? அப்போதிருந்தே இப்பள்ளியின் ஆரோக் கியமான செயல்பாட்டை, நல்லிணக்கக் கல் விச் சூழலை கெடுத்து விட வேண்டும் என்று  கீழ்த்தரமான முயற்சிகளை மதவெறிக் கும் பல் தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறது. இப் பள்ளி தலைமை ஆசிரியை சிறுபான்மை சமூ கத்தைச் சேர்ந்தவர், வேறு சில ஆசிரியர்க ளும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்க ளாக உள்ளனர். இதையே வாய்ப்பாகப் பயன் படுத்தி தங்கள் இழி முயற்சிகளைத் தொடர் கின்றனர்.

மதமாற்றப் புகார்

அப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வீட்டுப்பாடம் எழுதி வர வில்லை என்று வகுப்பு ஆசிரியை திட்டியுள் ளார். அதையே மதமாற்றம் செய்ய முயன்ற னர் என ஒரு புகார் எழுதி அந்த மாணவியின்  தந்தை காவல் நிலையத்தில் கொடுத்திருக்கி றார். இந்த விபரம் குறித்து உடனடியாக கல் வித் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட் டது. வருவாய்த் துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். இந்த புகாரின் உண்மை தன்மை பற்றி  பள்ளி நிர்வாகத்திடமோ, காவல் துறையி டமோ கருத்துக் கேட்டு பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய ஊடகத் துறையினர் அப்படி எதுவும் கேட்காமல் பரபரப்புக்கு அந்த புகார் கடிதத்தை வெளியிட்டனர். அது வும் ஏதேனும் பெரிய தனியார் பள்ளி என்றால்  பெயரைக் குறிப்பிடாமல்  “அறநெறி?!” காத்து செய்தி வெளியிடும் ஊடகங்கள், மாந கராட்சிப் பள்ளி விசயத்தில் அத்தகைய “அற நெறியை” கடைப்பிடிக்கவில்லை. வெளிப் படையாக பள்ளியின் பெயருடன் மதமாற்றப் புகாரை பெரிதாக வெளியிட்டு “கடமை”ஆற் றினர்.  தீக்கதிர் சார்பில் கல்வித் துறை, பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் பெற்றோர் ஆசி ரியர் கழகத்தைச் சேர்ந்தோரிடம் விசாரித்த போது, இது பொய் புகார் எனத் தெரியவந் தது. ஆனால் அதற்குள்ளாக “முன்னணி” நாளிதழ்கள், “பிரபல” செய்தி தொலைகாட்சி களில் மாணவியின் அப்பா கூறிய மதமாற்ற  புகார் செய்தி பரபரப்பாக வெளிவந்தது. மற்றொருபுறம் இந்து இளைஞர் முன் னணி என்ற பெயரில் மதவெறி கும்பல் வழக்க மான தனது வேலையைச் செய்தது. அருகா மையில் இருக்கும் மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலரை சீருடையுடன் அழைத்து வந்து ஜெய்வாபாய் பள்ளிக்கு அருகிலேயே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி னர்.  அதைத் தொடர்ந்து மதமாற்றம் செய்ய முயன்ற ஆசிரியர்களை காப்பாற்ற கல்வித் துறை முயற்சிப்பதாக ஊடகங்களிலும் செய்தி வெளியிட்டனர். அதையும் செய்தி ஆக்கிய சில ஊடகங்கள், கல்வித் துறை அதி காரிகளிடம் பதில் கேட்டு போட வேண்டும் என்று நினைக்கவில்லை. இப்படியாக மத வெறி சக்திகளின் தவறான பொய் பிரச்சாரம் சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்டது. இந்திய மாணவர் சங்கம் மட்டுமே இந்த பிரச்சனையில் மதவெறி அமைப்பின் நடவ டிக்கையை கண்டித்து, கல்விச் சூழலை சீர்கு லைக்க நினைப்பதை எதிர்த்து அறிக்கை கொடுத்தது. ஆனால் அறநெறி காக்கும் எந்த ஊடகங்களுக்கும், அந்த அறிக்கையை வெளியிடலாம் என்ற குறைந்தபட்ச எண் ணம் கூட தோன்றவில்லை. இந்நிலையில் செவ்வாயன்று அதே  இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மீண்டும் ஒரு ஆர்ப்பாட் டத்தை நடத்தினர். “பொய் நெல்லைக் குத்தி பொங்கல்” வைத்தனர்!

மாவட்ட ஆட்சியர் பதில்

நல்வாய்ப்பாக சில ஊடக செய்தியாளர் கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்தி டம் இந்த விசயம் குறித்து தற்செயலாக கேள்வி எழுப்பினர். இப்போதுதான் அதிகா ரப்பூர்வமாக மாவட்ட ஆட்சியர் பதில் அளித் தார். அதில் மாணவியை மதமாற்றம் செய்வ தாக எழுத்துப் பூர்வமாக கொடுத்திருக் கும் புகார் குறித்து கல்வித் துறை, வருவாய்த்  துறை மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட் டது. அந்த விசாரணையில் மதமாற்ற முயற்சி  செய்யப்பட்டதாக கூறப்படும் புகாரில்  உண்மை இல்லை என்பது கண்டறியப்பட் டது. இப்பிரச்சனையில் சிலர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். சமூக ஊடகங்களில் தகவல் பரப்புகின்றனர். பொய்யான தகவலைப் பரப் புவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையரிம் பேசியிருக்கிறேன். திருப்பூர் மாநகராட்சி ஆணையரிடமும் இந்த  பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கூறி இருக்கிறேன், என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அம்பலமான பொய்

அரசு நிர்வாகம் இந்த புகாரில் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிந்து அறிக்கை  சமர்ப்பிக்க ஓரிரு நாட்கள் ஆனநிலையில் அதற்குள்ளாக இப்பிரச்சனையை பெரிதுப டுத்த மதவெறி அமைப்பினர் எல்லா விதத்தி லும் முயற்சி செய்தனர். பொய் நெல்லில் வைத்த பொங்கல் பொங்கவில்லை. “பொய் நெல்லை குத்தி பொங்க நினைத்தவன், கை நெல்லை விட்டானம்மா..” என்பதற்கு ஏற்ப  பொய்யர் கூட்டம், இந்த விசயத்தில் அம்பலப் பட்டு நிற்கிறது. 80 ஆண்டு பெருமை மிகு ஜெய்வாபாய் பள்ளியில் மதமாற்றம் செய்வதாக பொய்ப் புகார் கொடுத்த மாணவியின் தந்தை, பேட்டி யளித்த மாணவி, போராட்டம் நடத்திய இந்து  முன்னணி மற்றும் அதில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று ஜெய்வாபாய் பள்ளியின் முன்னாள்  பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆ.ஈசுவ ரன் கோரியிருக்கிறார். ஆனால், அவர்கள் பொய்யை நிறுத்தப் போவதில்லை. திருப்பூர் நகர உழைக்கும் மக்கள் வீட்டுப் பிள்ளைகள் 6 ஆயிரம் பேர்  படிக்கும் ஜெய்வாபாய் பள்ளியில் வரும் காலத்தில் இது போல் இழி முயற்சியில் ஈடுபட் டால், அங்கு படிக்கும் மாணவிகள் மனதில் நஞ்சு கலக்காமல் தடுக்க வேண்டும், கல்வித்  துறை, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவியர் என அனைவரும் ஓரணியாய் திரண்டு நின்று  இந்த பெருமை மிகு பள்ளியைக் காக்க வேண்டும்.

வே.தூயவன்