சேலம், ஏப்.26- தூத்துக்குடி கிராம நிர்வாக அலு வலர் படுகொலையை கண்டித்தும், மணல் மாபியா கும்பலை கட்டுப்படுத்தக் கோரி மெழுகுவர்த்தி ஏந்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக இருந்த லூர்து பிரான்சிஸ், மணல் கடத்தலை தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல் கும்பல் பிரான்சிசை வெட்டி படுகொலை செய்தனர். இச்சம் பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை கண் டித்து மாநிலம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மெழுகு வர்த்தி ஏந்தியும், கருப்பு ரிப்பன் அணிந் தும் எதிர்ப்பை பதிவு செய்தனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண் டும் என முழக்கங்களை எழுப்பினர். இதில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலை வர் வி.அர்த்தனாரி. கிராம நிர்வாக அலு வலர் சங்க தலைவர் மோகன்ராஜ், செய லாளர் கலைச்செல்வன் ஆகியோர் கண் டன உரையாற்றினார். இதில் சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவி யாளர்கள் பங்கேற்றனர். கோவை இதேபோன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், திரளானோர் பங்கேற்றனர்.