கே.இ.பிரகாஷ் பேச்சு நாமக்கல், ஏப்.15- வரும் நாடாளுமன்ற தேர்தல் விலை வாசிகளை குறைப்பதற்கான தேர்த லாகும் என பிரச்சாரத்தின்போது, திமுக வேட்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலின் பரப்புரை கள் சூடு பிடித்துள்ள நிலையில், பள்ளி பாளையம் ஒன்றியப் பகுதிகளான தாஜ் நகர், அன்னை சத்யாநகர், கரட்டாங் காடு, ஆயக்காட்டூர், காவேரி ஆர்எஸ், ஆலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தியா கூட்டணி சார் பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ. பிரகாஷ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், பெண்க ளுக்கான கலைஞர் உரிமைத்தொகை தேர்தல் முடிந்து இரண்டு மாதம் கழித்து ஆகஸ்ட் மாதம் முதல் அரசு ஊழியர் தவிர அனைத்து மகளிருக்கும் வழங் கப்படும். மேலும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் டீசல், பெட்ரோல் விலைகள் 30 ரூபாய் வரை குறைக்கப் படும். எரிபொருட்களின் விலை குறைந் தாலே அனைத்து பொருட்களின் விலை யும் குறைந்து விடும். எனவே, வரும் தேர்தல் விலைவாசிகளை குறைப்ப தற்கான தேர்தலாகும், என்றார். அப் போது, பிரச்சார வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வெயிலில் நின்று ஆரத்தி தட்டு வைத்து சோர்வுடன் நின்ற மூதாட்டிக்கு தனக்கு போடப்பட்ட பொன் னாடையை எடுத்து போர்த்தி வாக்கு களை சேகரித்தார்.