districts

எந்த ஆடு இந்த ஆட்டிடம் சொன்னதோ?

திருப்பூர், ஏப். 17 - ஆட்டு மந்தையில் ஆட்டின் தலைவனை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்று இந்த ஆட்டிடம் எந்த ஆடு சொன்னதோ தெரி யவில்லை, பிரதமர் யார் என்பதை  மக்கள் வாக்களித்த நாடாளுமன்ற  உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பார் கள் என்பதை 20 ஆயிரம் புத்தகத் தில் எந்த பக்கத்திலும் இல்லையா என அண்ணாமலைக்கு பி.ஆர்.நட ராஜன் எம்பி., கேள்வி எழுப்பி னார். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன் மற் றும் கோவை தொகுதி வேட்பாளர்  கணபதி ராஜ்குமார் ஆகியோ ருக்கு ஆதரவாக கோவை மற்றும்  திருப்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இறு திக்கட்ட பரப்புரையில் ஈடுபட்ட னார்.  கருவம்பாளையம் கேவிஆர் நகர் பகுதியில் திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் கே. சுப்பராயனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். மேலும் கோவை நாடாளுமன்ற தொகு திக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்ற  தொகுதியில் இடம் பெற்றுள்ள பகு திகளில் அவர் தீவிர பிரச்சாரம் செய்தார். வீரபாண்டி, பொங்க லூர் ஐயப்பா நகர், பல்லடம் பேருந்து நிலையம் முன்பு, காளி வேலம்பட்டி, பள்ளிபாளையம், இடுவாய், மங்கலம் ஆகிய பகு திகளில் நடைபெற்றது.  இப்பிரச்சார இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் செ.  முத்துக்கண்ணன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் சி.மூர்த்தி, டி. ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஜி.சம்பத், எஸ்.பவித்ரா,  பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் பி. பாலன், பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் மற்றும்  ஏராளமான மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் பங்கேற்றனர். இப்பிரச்சாரத்த்தின் ஊடாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பி.ஆர்.நடராஜன் கூறுகை யில், அப்போது “ஆட்டுமந்தை கூட  எட்டு நாட்களில் தனது தலை வனை தேர்ந்தெடுக்கிறது. ஆனால்  இந்தியா கூட்டணி எட்டு மாதங்க ளாக யார் தலைவர் என தெரியாமல்  உள்ளனர் என அண்ணாமலை பேசி யுள்ளார், அரசியலில் கத்துக்குட்டி களை பார்த்திருக்கிறோம். அண்ணாமலை போன்ற அரை வேக்காடு அரசியல்வாதியை நாம் இப்போதுதான் பார்க்கிறோம். நரசிம்மராவ், ஐகே.குஜரால், சந்திரசேகர், தேவகவுடா போன்ற வர்கள் தேர்தலுக்குப் பிறகுதான்  பிரதமராக தேர்வு செய்யப்பட்டனர் என்பது வரலாறு.  நடைபெறவுள்ள தேர்தல் என்பது நாடாளுமன்ற உறுப்பி னர்களை தேர்வு செய்வதற்கான இந்தியாவின் தேர்தலே தவிர,  நேரடியாக பிரதமரை தேர்ந்தெடுக் கின்ற தேர்தல் அல்ல. எப்பொழு தும் ஒரு நபரை முன்னிருத்துவது என்பது அமெரிக்க அரசியலுக்கு வேண்டுமானால் பொருந்துமே தவிர, இந்திய ஜனநாயக அரசிய லுக்கு பொருந்தாது. எதற்கெடுத்தாலும் ஆடு உதார ணம் சொல்கின்ற அண்ணாமலை, ஆட்டினுடைய தலைவரை தேர்ந் தெடுத்தார் என்று எந்த ஆடு இந்த  ஆட்டிடம் சொன்னது என எங்க ளுக்கு தெரியவில்லை. ஜனநாயக  முறைப்படி நடக்கும் இந்த தேர்த லில் நாடாளுமன்ற உறுப்பினர் களை தேர்ந்தெடுத்த பிறகு தான் அவர்கள் ஒன்றாக அமர்ந்து பிரத மரை தேர்ந்தெடுப்பார்கள். 20 ஆயி ரம் புத்தகங்களை படித்ததாக சொல்லும் அண்ணாமலை, இந்திய  அரசியல் வரலாற்றை இருபதாயி ரத்து ஒன்றாவது புத்தகமாக படிக்க  வேண்டும். பிரதமர் மோடி 2014 தேர்தல் வாக்குறுதியில் நான் பிரத மர் ஆனால் 30 நாட்களுக்குள் பெட் ரோல் டீசல் விலையை ரூ50 ஆக  குறைப்பேன் என கூறினார். அவர்  கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றாததால் அதை மறைப்பதற் காக தான் அண்ணாமலை போன்ற  தற்குறிகள் இதுபோன்ற தவறான  பிரச்சாரங்களை மேற்கொள்கிறார் கள். ஆனால், இந்தியா கூட்டணி ஒற்றுமையாக, பலமாக தேர்தலை சந்திக்கிறது. இந்தியா கூட்டணியே ஆட்சியை அமைக்கும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வரும். தற்போது உள்ள ஜிஎஸ்டியில் அனைத்து குறைபாடுகளும் தீர்க் கப்படும். மாநில உரிமைகள் பாது காக்கப்படும். இந்திய நாட்டின் எதிர்கால நலனை பாதுகாக்க, ஜனநாய கத்தை பாதுகாக்க, சர்வாதிகார மோடி அரசை வீழ்த்த வேண்டும். அதற்கு இந்தியா கூட்டணிக் கட்சி களுக்கு ஆதரவு அளித்து வாக்க ளிக்க வேண்டும் என பி.ஆர்.நடராஜன் எம்.பி., கேட்டுக் கொண் டார்.